Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறை: இலங்கை கிரிக்கெட் அணி வீரருக்கு நடந்த சர்ச்சை சம்பவம்!

November 7, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறை: இலங்கை கிரிக்கெட் அணி வீரருக்கு நடந்த சர்ச்சை சம்பவம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இலங்கை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

இன்றைய தினம் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைத்தானத்தில் இடம்பெற்றது.

இதன்போது, 2023 உலகக் கோப்பை விளையாடும் நிபந்தனைகளின் படி, ஒரு புதிய துடுப்பாட்ட வீரர் வந்த 2 நிமிடங்களில் தனது முதல் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

இந்நிலையில் ஏஞ்சலோ மேத்யூஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு பந்தை எதிர்கொள்ளாததால் அவரை அவுட் செய்யுமாறு பங்களாதேஷ் அணி நடுவரிடம் முறையிட்டது.

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறை: இலங்கை கிரிக்கெட் அணி வீரருக்கு நடந்த சர்ச்சை சம்பவம்! | International Cricket Angelo Mathews Timed Out

இதுதொடர்பில் இலங்கையின் கேப்டன் சிலவற்றை நடுவர்களிடம் விளக்க முயன்றார், இந்தபோதிலும் அது பலனில்லை.

விதிகளின்படி, ஒரு புதிய துடுப்பாட்ட வீரர் 2 நிமிடங்களுக்குள் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மேத்யூஸ் களத்தில் இருந்தபோதிலும் அவரது ஹெல்மெட்டில் சில பிரச்சனை இருந்ததால் பேட்டிங் செய்ய தயாராகவில்லை.

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறை: இலங்கை கிரிக்கெட் அணி வீரருக்கு நடந்த சர்ச்சை சம்பவம்! | International Cricket Angelo Mathews Timed Out

இதன்போது, பங்களாதேஷ் மேத்யூஸுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு செய்த நிலையில் நடுவருக்கு அவரை வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.

எதிரணி வீரர்கள் மேல்முறையீடு செய்தால் மட்டுமே கள நடுவர்கள் ஒரு துடுப்பாட்ட வீரரை அவுட் செய்ய முடியும். பங்களாதேஷ் மேல்முறையீட்டை வாபஸ் பெற முடிவு செய்திருந்தால் மேத்யூஸ் நடுநிலையில் இருந்திருப்பார்.

இருப்பினும் நடுவர்கள் அவரை அவுட் என தெரிவித்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து மேத்யூஸ் கடுமையான கோபத்துடன் வெளியேறினர்.

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறை: இலங்கை கிரிக்கெட் அணி வீரருக்கு நடந்த சர்ச்சை சம்பவம்! | International Cricket Angelo Mathews Timed Out

 

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட்டில் டைம் அவுட் வழங்கப்பட்ட முதல் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தான்.

இதுதொடர்பில் சமூக வலைதளங்களில் பலவிதமான சர்ச்சைக்குரிய கருத்துகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Tags: #AngeloMathews#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 07-11-2023

Next Post

கமல்ஹாசனை விமர்சித்த சனம் ஷெட்டி

Next Post
கமல்ஹாசனை விமர்சித்த சனம் ஷெட்டி

கமல்ஹாசனை விமர்சித்த சனம் ஷெட்டி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.