Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சர்வதேசத்தின் குரல்களை புறக்கணிக்கும் ரணில் – எழுந்துள்ள குற்றச்சாட்டு

September 1, 2022
in இலங்கை
சர்வதேசத்தின் குரல்களை புறக்கணிக்கும் ரணில் – எழுந்துள்ள குற்றச்சாட்டு
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி, அமைதியான போராட்டக்காரர்களைக் இலக்கு வைப்பதை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டும். தடுப்புக் காவலில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். சர்வதேசத்தின் குரல்களை புறக்கணிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முனைப்புடன் இருக்கின்றார் என்று தெரிகின்றது.

இவ்வாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி நேற்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மூன்று ஆர்வலர்களை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். இந்தச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி ஒரு வருடம் வரை தடுப்பு காவலில் வைக்க முடியும்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உள்ளிட்ட உரிமைகளை நசுக்கியுள்ளார். அவரது நிர்வாகம் ஒரு மாத அவசரகால நிலையை விதித்தது, ஆர்ப்பாட்டக்காரர்களை வன்முறை மூலம் கலைக்கப் பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தியது. அமைதியான போராட்டங்களில் பங்கேற்ற பல பொதுமக்களைக் கைது செய்தது.

அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்துவோம் என்று, உரிமைகளை மதிக்கும் சட்டத்தை அதற்குப் பதிலாக மாற்றுவோம் என்றும் அளித்த வாக்குறுதிகளை மீறியுள்ளன.

சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் மக்களை அமைதியான முறையில் முடக்குவதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க பயன்படுத்தியிருப்பது, அவரது நிர்வாகத்தின் போது உரிமைகளுக்கு முன்னுரிமை கிடைக்காது என்ற ஒரு செய்தியை இலங்கையர்களுக்கு அனுப்புகிறது.

2015ஆம் ஆண்டு பிரதமராக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஒருமித்த தீர்மானத்தை ஆதரித்தபோது, .இந்தச் சட்டம் நீக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

2017ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் திட்டத்தில் இலங்கை மீண்டும் சேர்க்கப்பட்டபோது, சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளுக்கு இணங்குவதற்குவதாக உறுதிமொழியை அவர் மீண்டும் அளித்தார். ஜூலை மாதம், அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது நடைமுறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

முன்னதாக, மார்ச் 22 அன்று, அப்போதைய நீதிஅமைச்சரும், தற்போதைய வெளியுறவு அமைச்சருமான, அலி சப்ரி, “பயங்கரவாதத்துடன் நேரடி தொடர்பு கொண்ட குற்றங்கள் தவிர மற்ற குற்றங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு நடைமுறைத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகிய மூவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் சீர்திருத்தம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான மதிப்பை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டில் உள்ள தமது பங்காளிகளின் அழைப்புகளை புறக்கணிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முனைப்புடன் இருக்கின்றார் என்று தெரிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: meenakshi gangulyஇலங்கைரணில் விக்கிரமசிங்கஜனாதிபதி
Previous Post

இன்றைய ராசி பலன் – 01.09.2022

Next Post

ராஜபக்சக்களின் ஊழல்களே நிதிப் பேரிடருக்குக் காரணம் – சந்திரிகா

Next Post
ராஜபக்சக்களின் ஊழல்களே நிதிப் பேரிடருக்குக் காரணம் – சந்திரிகா

ராஜபக்சக்களின் ஊழல்களே நிதிப் பேரிடருக்குக் காரணம் - சந்திரிகா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.