Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சபரிமலை யாத்திரைக்கு சென்ற யாழ் பக்தருக்கு விமானத்தில் நேர்ந்த கதி!

January 11, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
சபரிமலை யாத்திரைக்கு சென்ற யாழ் பக்தருக்கு விமானத்தில் நேர்ந்த கதி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையைச் சேர்ந்த ஒருவர் கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது உயிரிழந்துள்ளார்.

சபரிமலை யாத்திரைக்காக விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் 49 வயதுடைய மோகனதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விமானத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் அவரது உடல்நிலை மோசமானதால், இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசர கால மருத்துவ உதவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விமானம் சென்னையில் தரையிறங்கியதும் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் விமானத்தில் ஏறி குறித்த நபரை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த விமான நிலைய பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்ல வந்த மோகனதாஸ் இறந்ததால், அவரது உடலை மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்ல இலங்கை தூதரக அதிகாரிகள் மூலம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags: #Flight#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

கனடாவில் வீட்டு உரிமயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள தலையிடி

Next Post

கனடாவில் விமானக் கதவை திறந்து கீழே வீழ்ந்த பயணி

Next Post
கனடாவில் விமானக் கதவை திறந்து கீழே வீழ்ந்த பயணி

கனடாவில் விமானக் கதவை திறந்து கீழே வீழ்ந்த பயணி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.