Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சந்திரயான் 3 திட்டப் பொறியாளர் இட்லி விற்கும் அவலம்

September 20, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
சந்திரயான் 3 திட்டப் பொறியாளர் இட்லி விற்கும் அவலம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

சந்திரயான் 3 இன் வெற்றி இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது. இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்திற்கு ஏவுதளம் அமைத்த பொறியாளர் ஊதியம் வழங்கப்படாததால், தற்போது இட்லி விற்று பிழைப்பு நடத்தி வருவதாக கூறப்படுகின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலவுக்கு விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக அனுப்பிவிட்டது என்று உலக நாடுகள் அனைத்தும் பாராட்டி வரும் அதே நேரத்தில், சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றிய பொறியாளர் தனது வாழ்வாதாரத்திற்காக இட்லி விற்று வருகின்றாராம்.

சந்திரயான்-3 திட்டத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியில் உள்ள ஹெச்.இ.சி என்ற பொதுத்துறை நிறுவனமும் இணைந்து வேலை செய்தது. மத்தியப்பிரதேச மாநிலம் ஹர்டா மாவட்டத்தை சேர்ந்த தீபக் குமார் உப்ரரியா என்ற பொறியாளர் இந்த நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார்.

தீபக் குமார் உப்ரரியா , ஏவுதள கட்டுமான வேலைகளில் இஸ்ரோவிற்காக, ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் சார்பில் சந்திரயான்-3 விண்கலனுக்கு மடங்கும் நடைமேடையையும், ஸ்லைடிங் கதவுகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் ஹெச்.இ.சி நிறுவனம் சுமார் 18 மாதங்களாக தங்களது 2,800 ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லை. இதனால், தீபக் குமார், மகள்களுக்கு பாடசாலை கட்டணம் கூட செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குடும்ப வறுமையை போக்க வீதியோர உணவகத்தை திறந்து இட்லி விற்பனை செய்து கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

காலையில் ஹெச்.இ.சி. நிறுவனத்திற்கு செல்லும் அவர், குடும்ப வருமானத்திற்காக மாலையில் வீதியோரம் இட்லி விற்றுவருகின்றமை வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: #Chandrayaan3#DeepakKumar#project#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Ubrariasrilanka
Previous Post

நாட்டை விட்டு வெளியேறிய தாதிக்கு 03 இலட்சம் சம்பளம்!

Next Post

நினைவேந்தலுக்கு எதிராக தமிழில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்: பின்னணியில் இராணுவ புலனாய்வாளர்கள்

Next Post
நினைவேந்தலுக்கு எதிராக தமிழில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்: பின்னணியில் இராணுவ புலனாய்வாளர்கள்

நினைவேந்தலுக்கு எதிராக தமிழில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்: பின்னணியில் இராணுவ புலனாய்வாளர்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.