Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சத்திரசிகிச்சை தவறால் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி : உறவினர்கள் குற்றச்சாட்டு

August 18, 2024
in இலங்கை, மருத்துவம், முக்கியச் செய்திகள்
சத்திரசிகிச்சை தவறால் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி : உறவினர்கள் குற்றச்சாட்டு
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தமைக்கு சத்திரசிகிச்சை செய்த வைத்தியரே பொறுப்பேற்க வேண்டுமென உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.உயிரிழந்தவரின் நரம்பு துண்டிக்கப்பட்டதன் காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்த போதிலும், நரம்பில் ஏதோ குத்தப்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சத்திரசிகிச்சை செய்த வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மெதிரிகிரியவில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதான சஞ்சன ராஜபக்ஷ என்பவர் விபத்திற்குள்ளாகியுள்ளார்.

அறுவை சிகிச்சைஇதன்போது குறித்த நபரின் இடது கையில் பாதிப்பு ஏற்பட்டதால், அது உணர்ச்சியற்று போனதால் அவரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இதற்கு சிகிச்சை எடுப்பதற்காக கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு சென்று மருத்துவர் ஒருவரை சந்தித்த போது நரம்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கு கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.அறுவைசிகிச்சைக்குப் பிறகு, அவர் சுயநினைவை இழந்ததால், அவரது மனைவி இது குறித்து மருத்துவரிடம் வினவிய போது, சஞ்சனவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து மூளை இறக்கத் தொடங்கியதால், நோயாளியைக் காப்பாற்ற முடியாததால் சுவாசக் கருவியை அகற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சுவைத்தியரின் அலட்சியத்தால் தனது கணவர் உயிரிழந்துள்ளதாக சஞ்சனவின் மனைவி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சஞ்சனவின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், அவரது உடலை அடக்கம் செய்யுமாறு மரண விசாரணை அதிகாரி அறிவித்துள்ளார்.

Previous Post

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு தொடர்பான அறிவிப்பு இன்று

Next Post

ராஜஸ்தானில் பாடசாலை மாணவன் மீது கத்திக்குத்து : வெடித்தது கலவரம்

Next Post
ராஜஸ்தானில் பாடசாலை மாணவன் மீது கத்திக்குத்து : வெடித்தது கலவரம்

ராஜஸ்தானில் பாடசாலை மாணவன் மீது கத்திக்குத்து : வெடித்தது கலவரம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.