Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சட்ட நடவடிக்கைக்குள் சிக்கவுள்ள கோத்தாபய?

September 5, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கோத்தாபயவின் வீட்டுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பொருளாதார நெருக்கடி காரணமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து ஏழு வாரங்கள் நாடு கடந்த நிலையில் வசித்த பின்னர் சிறிலங்கா திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச செயற்பாட்டாளர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ளக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதிக்கு இலங்கையின் அரசமைப்பு வழங்கியுள்ள விடுபாட்டுரிமை தற்போது அவருக்கு இல்லாததன் காரணமாக அவருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்று தெரியவருகின்றது.

தாய்லாந்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு திரும்பிய கோத்தாபய ராஜபக்ச கடும் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். ஜனாதிபதி என்ற அடிப்படையில் அரசமைப்பு வழங்கிய சிறப்புரிமை காரணமாக கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் எதுவும் இல்லை.

பாதுகாப்புச் செயலாளராக அவர் பணியாற்றியவேளை இடம்பெற்ற ஊழல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் அவர் ஜனாதிபதியான பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது.

ஆயினும் இரண்டு இளம் அரசியல் ஆர்வலர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சாட்சியமளிப்பதிலிருந்து அவருக்கு வழங்கப்பட்ட விடுபாட்டுரிமையை சவாலுக்கு உட்படுத்தி அவரை உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற அழைப்பாணை அனுப்பப்படும் என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவம் செய்யும் நுவான்போபகே தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் அழைப்பாணை அனுப்பப்படவிருந்தவேளை கோத்தாபய நாட்டிலிருந்து தப்பியோடினார் என்றும் நுவான்போபகே தெரிவித்துள்ளார்.

இந்த காணாமல்போதல் சம்பவங்கள் 12 வருடத்துக்கு முன்னர் இலங்கையின் உள்நாட்டு போர் முடிந்த பின்னர் கோத்தாபய ராஜபக்ச நாட்டின் வலுவான பாதுகாப்பு அதிகாரியாக சகோதரர் மகிந்த ராஜபக்ச (அப்போது ஜனாதிபதி) அரசாங்கத்தின் கீழ் இருந்தபோது இடம்பெற்றன.

அந்தச் சமயம் கிளர்ச்சிக்காரர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் பத்திரிகையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரை கடத்தி சென்ற கடத்தல் குழுவை வழிநடத்தினார் என கோத்தாபய ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவ்வாறு கடத்தப்பட்ட பலர் மீண்டும் திரும்பிவரவில்லை, ஆயினும் கோத்தாபய தான் தவறிழைத்தார் என்பதை மறுத்து வருகின்றார்.

நாடு பொருளாதார வங்குரோத்து நிலைக்குள் தள்ளப்பட்டு முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதால் சீற்றமடைந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி முற்றுகைப் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பி வெளியேறினார். சில நாள்களுக்குப் பின்னர் அவரும் அவரது மனைவியும் மெய்பாதுகாவலரும் இராணுவ விமானத்தில் மாலைதீவுக்கு தப்பிச்சென்றனர். அதன் பின்னர் சிங்கப்பூருக்கும் பின்னர் தாய்லாந்துக்கும் சென்றனர்.

Tags: இலங்கைகோத்தாபயநாடாளுமன்றம்ஜனாதிபதி
Previous Post

இன்றைய ராசி பலன் – 05.09.2022

Next Post

இலங்கை தொடர்பில் ஐ.நாவுக்கு விடுக்கப்பட்ட வலியுறுத்தல்

Next Post
ஐ.நா அமர்வில் பங்கேற்போரின் எண்ணிக்கையை குறைக்க முடிவு

இலங்கை தொடர்பில் ஐ.நாவுக்கு விடுக்கப்பட்ட வலியுறுத்தல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.