Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கோத்தாபய பதவி விலகக்கோரி போராட்டம்!!- ஹிருணிகா உட்பட 11 பேர் கைதாகி விடுதலை!!

July 7, 2022
in இலங்கை
கோத்தாபய பதவி விலகக்கோரி போராட்டம்!!- ஹிருணிகா உட்பட 11 பேர் கைதாகி விடுதலை!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 11 பேர் நேற்றுக் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஹிருணிகா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அங்கிருந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஒன்றுசேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முற்பட்டபோது, பொலிஸார் அவர்களை நோக்கி நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்தினர். அதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை நிலவியது.

பொலிஸாரின் கண்ணீர்ப் புகைத் தாக்குதலால் அந்தப் பகுதியில் வீதியில் செல்லும் வாகனங்களில் பயணிப்போர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

கைதுசெய்யப்பட்ட ஹிருணிகா உள்ளிட்ட 11 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இதேவேளை, ஹிருணிகா பிரேமச்சந்திர குழுவினர் கைதுசெய்யப்பட்டதும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உடனடியாக அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்க முன்வந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் சட்டத்தரணிகளுடன் நேரடியாகப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று தேவையான சட்ட உதவிகளை மேற்கொண்டனர்.

அதேவேளை, தற்போதைய அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக கொழும்பில் வேறு சில இடங்களிலும் நேற்றுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நாடாளுமன்றத்துக்கு அருகிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

Tags: இலங்கைஎதிர்ப்புப் போராட்டம்கோத்தாபய ராஜபக்சஜனாதிபதிஹிருணிகா பிரேமச்சந்திர
Previous Post

முல்லைத்தீவில் கடத்தப்பட்ட 3 இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!!

Next Post

ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும்! – தம்மிக்க பெரேரா கோரிக்கை!

Next Post
ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும்! – தம்மிக்க பெரேரா கோரிக்கை!

ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும்! - தம்மிக்க பெரேரா கோரிக்கை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.