Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் விசாரிக்க 25 குழுக்கள்!!

March 9, 2022
in இலங்கை
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் விசாரிக்க 25 குழுக்கள்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் 14 ஆயிரத்து 988 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை தொடர்பில் துரித விசாரணை செய்யும் நோக்கில் 25 விசாரணைக் குழுக்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திபபு நேற்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தால் மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் பிராந்திய அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அந்தப் பிராந்திய அலுவலகங்களுக்கு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக 14 ஆயிரத்து 988 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய முறையான விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அறிக்கைகளை வழங்கல் உள்ளிட்ட அதிக பணிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்து முடிவுறுத்துவதற்காக 25 விசாரணைக் குழுக்களை நியமித்து துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீதி அமைச்சர் அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளார்.-என்றார்.

Tags: இலங்கைகாணாமல் ஆக்கப்பட்டோர்டலஸ் அழகப்பெருமமுறைப்பாடுகள்விசாரணை
Previous Post

தமிழ்க் கட்சிகளை இணைத்து அரசியல் தீர்வுக்கு நகருங்கள்!- இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!!

Next Post

பெரமுனவின் சின்னம் அழுகிய முட்டையா?- சபையில் பொன்சேகா விசனம்!!

Next Post
பெரமுனவின் சின்னம் அழுகிய முட்டையா?- சபையில் பொன்சேகா விசனம்!!

பெரமுனவின் சின்னம் அழுகிய முட்டையா?- சபையில் பொன்சேகா விசனம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.