Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அனைவரும் ஒன்றிணையுமாறு கிளிநொச்சி அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கம் அழைப்பு.

August 6, 2021
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தற்போது நாட்டில் இடம்பெறும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க
போராட்டத்திற்கு வலு சேர்க்கும் நோக்கில் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு இன,மத, பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு கிளிநொச்சி மாவட்ட அதிபர்
சங்கம், இலங்கை ஆசிரியர் சங்க கிளிநொச்சி கிளை  என்பன கூட்டாக அறிவிப்பு!

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க
போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம்,
இலங்கை ஆசிரியர் சங்க கிளிநொச்சி கிளை என்பன கூட்டாக அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பு தொடர்பான ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சி ஊடக
அமையத்தில் நடைபெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கிளிநொச்சி
மாவட்ட அதிபர் சங்க தலைவர் சவரி பூலோகராஜா தெரிவிக்கையில்
வடபகுதியைச்சேர்ந்த கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து போராட்டத்திற்கு
வலுச்சேர்க்க என்னியுள்ளோம் கொரோனா நிலைமையில் பாடசாலைகள் மூடப்பட்ட
நிலையில் மாணவர்களின் கல்வி இழக்கக்கூடாது என்ற நிலையில் கிளிநொச்சி
மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள் ஆசிரியர்களைப்பயன் படுத்தி
மாணவர்களுக்கு Zoom,மற்றும் செயலட்டை ஊடாக கற்றலை மேற்கொண்டிருந்தோம்
சம்பள முரண்பாடு தீர்க்கும் வரை அனைவரும் குறித்த கற்றல்
செயற்பாடுகளிலிருந்து விலகியுள்ளோம் பெற்றோர்கள் எங்களோடு
முரண்பாடாதீர்கள் எமது போராட்டம் தீர்வு பெற ஒத்துழைப்பு வழங்குங்கள்
மாணவர்கள் இழந்த கல்வியை மீள வழங்குவோம் எதிர் வரும் திங்கட்கிழமை
அமைச்சரவைக்கூட்டத்தில் எமக்கான சாதகமான முடிவு கிடைக்காது விடின் அடுத்த
வாரமளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை
முன்னெடுக்கவுள்ளோம் அதற்கு இன,மத, பேதமின்றி அனைவரும்  ஒன்றிணையுமாறு
கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி கிளை செயலாளர்
திருநாவுக்கரசு சிவரூபன் கருத்து தெரிவிக்கையில் நீண்டகாலமாக
அதிபர்,ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர் சங்கம் முன்னெடுக்கும் போராட்டத்தை
காலத்திற்கு காலம் வருகின்ற அரசுகளும் தீர்க்க தவறுகின்றன.இந்த
அரசாங்கத்தின் கல்வியமைச்சர் ஜீஎல் பீரிஸ் சுபோதினி ஆணைக்குழுவை அமைத்து
குறித்த ஆணைக்குழு ஊடாக அறிக்கை பெற்றும் அந்த அறிக்கையை இன்னும்
நடைமுறைப்படுத்தவில்லை அதனை நடைமுறைப்படுத்தவே போராடுகின்றோம் 1997ம்
ஆண்டு போல் ஏனைசேவையைப்போல் சமனான சம்பளத்தையே எமக்கும் வழங்குமாறு
.கேட்கின்றோம் நாடாளவிய ரீதியில் பேரெழுச்சி கொள்வது போல் கிளிநொச்சி
மாவட்டத்திலும் போராட்டம் பேரெழுச்சி பெறும் மாவட்டத்தின் அதிபர்,
ஆசிரியர் சங்கங்கள் 100வீதம் கற்றலிருந்து விலகுவதாக
உறுதியளித்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு அமைச்சரவை
முடிவுகளிலும் எதிர்பார்க்கின்றோம் எமது பிரச்சனைக்கான சாதகமான பதில்
கிடைக்குமா என்று மூன்று வாரங்கள் கடந்தும் இதுவரை சாதக பதில் ஒன்று
கிடைக்கவில்லை  ஏனைய தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்கு உடனே சாதகமான
பதில் கிடைக்கிறது .எமது போராட்டத்திற்கு மட்டும் கிடைக்கவில்லை
திங்கட்கிழமையும் அமைச்சரவை கூடுகின்றது. சாதகமான பதில் கிடைக்காது
விட்டால் அடுத்த வாரமளவில் குறித்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்
வகையில் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு
வலுச்சேர்க்கும் முகமாக அனைவரும் ஒறிணையுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

செய்தி: திரு.மு.தமிழ்ச்செல்வன்

Previous Post

ஒலிம்பிக் போட்டியில் விளையாட வந்த இடத்தில் புகலிடம் கோரி கதறிய வீராங்கனை: திடுக்கிட வைத்துள்ள ஒரு செய்தி..!

Next Post

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணிணிக் கொள்வனவில் 2 கோடியே 76 இலட்சம் முறைகேடு?

Next Post

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணிணிக் கொள்வனவில் 2 கோடியே 76 இலட்சம் முறைகேடு?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.