Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home கனடா

கனடா தேர்தல்; மூன்றாவது முறையாகவும் வென்று எம்.பியாகிறார் ஹரி ஆனந்தசங்கரி!

September 21, 2021
in கனடா, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் கனேடியரான ஹரி ஆனந்தசங்கரி கனடா நாடாளுமன்றத் தோ்தலில் மூன்றாவது தடவையாகவும் வென்று கனேடிய பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.ரொரண்டோவின் – ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களைவ விட பெரும்பான்மையான வாக்குகளை பெற்று சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தார்.2011 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட லிபரல் வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரி 34.8 சதவீத வாக்குளைப் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேடிவ் வேட்பாளர் 31.6 சதவீதம் வாக்குகளையும் என்.டி.பி. வேட்பாளர் 31 சதவீத வாக்குகளை பெற்றிருந்தனர். 2019 இரண்டாவது தோ்தலிலும் அவர் சிறப்பான வெற்றியை பதிவு செய்தார்.இந்நிலையில் நேற்று நடைபெற்ற தோ்தலில் அவர் மீண்டும் மூன்றாவது தடவையாக வென்று சாதித்துள்ளார்.ஹரி ஆனந்தசங்கரி இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுலைக் கூட்டணியின் தலைவருமான வி.ஆனந்தசங்கரியின் புதல்வராவார்.13 வயதில் கனடாவிற்குப் புலம்பெயர்ந்த ஹரி ஆனந்தசங்கரி, புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றில் பல அரிய செயல்களைச் செய்தவர்.கனடாவில் தமிழ் இளைஞர்களிடையே ஏற்பட்ட வன்முறை சார்ந்த ஒரு கலாச்சாரத்தை அழிப்பதற்கான கனடிய தமிழ் இளைஞர்கள் சேவை நிலையத்தை ஆரம்பித்து கனடாவில் தமிழ் இளைஞர்களின் முரண்பாடுகளைத் தீர்க்கப்பாடுபட்டவர்.அதேபோல கனடாத் தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் ஒரு காலகட்டத்தில் ஆரோக்கியமான பங்களிப்பை வழங்கியவர்.இதற்கும் மேலாக கனடியத் தமிழ்க் கொங்கிரஸ் என்ற அமைப்பின் வளர்ச்சிக்கான பொருளாதார உதவுனராக இருந்தவர்.மனித உரிமை வழக்கறிஞரான ஹரி ஆனந்தசங்கரி, சிறப்பான அரசியல்வாதியாகவும் பெயர்பெற்றுள்ளார்.லிபரல் கட்சி தலைவராக ஜஸ்ரின் ரூடோவை தேர்வு செய்வதிலும் ஹரி ஆனந்தசங்கரி தீவர பங்காற்றியவர்.ஹரி ஆனந்தசங்கரி மூன்றாவது முறையாகவும் கனடா நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானமை புலம் பெயர் தமிழ் சமூகத்தினரிடையே உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.புலம்பெயர் தமிழ் மக்கள் தாம் வாழும் தேசங்களில் அரசியல் ரீதியில் நிலைநாட்டிவரும் சாதனைகளில் ஹரி ஆனந்தசங்கரியின் சாதனையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Previous Post

10 Keys into a Successful Relationship

Next Post

அதிக ஒலியுடன் பாடல்களை ஒலிக்க தடை!

Next Post

அதிக ஒலியுடன் பாடல்களை ஒலிக்க தடை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.