Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கண்டி மாவட்டத்தில் 1,800 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

June 1, 2024
in இலங்கை, மருத்துவம், முக்கியச் செய்திகள்
கண்டி மாவட்டத்தில் 1,800 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
0
SHARES
Share on FacebookShare on Twitter

கண்டி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் 1,836 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சேனக தலகல தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் இதுவரை டெங்கு மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும், நோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், இறப்பு வீதத்தை பூஜ்ஜியமாக வைத்திருக்கவும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கண்டி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் 30ஆம் திகதி நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த மே மாதத்தில் மாவட்டத்தில் 251 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கண்டி நகர எல்லையில் மட்டும் 47 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தார். வீடுகளில் டெங்கு பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் கொசுக்கள் பெருகும் இடங்கள் அரச நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் காணப்படுவதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் கடந்த வருடம் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியதாகவும், சிகிச்சை பெறுவதில் தாமதம் உள்ளிட்ட பல காரணங்கள் பாதிக்கப்பட்டதாகவும் மத்திய மாகாண சமூக சுகாதார நிபுணர் டொக்டர் சுரங்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகே, கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Previous Post

குறைந்த விலையில் பழைய வாகனங்கள் பெற்று அதிக விலைக்கு வர்த்தக மோசடி.

Next Post

முதியவர்களுக்கான கொடுப்பனவு மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு…

Next Post
முதியவர்களுக்கான கொடுப்பனவு மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு…

முதியவர்களுக்கான கொடுப்பனவு மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு...

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.