Thursday, May 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home covid

ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு நீடிக்கப்படாது – அமைச்சர் கெஹலிய.

August 28, 2021
in covid, இலங்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ரீதிலான தனிமைப்படுத்தல் ஊரடங்கு
ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்கப்படாது என சுகாதார அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

முடக்கம் காரணமாக பொருளாதாரம் மற்றும் நாளாந்த சம்பளம் பெறுபவர்களின்
வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் அந்த தீர்மானத்திற்கு
தனிப்பட்டமுறையில் தான் எதிராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில்
முடிவுகள் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல
தெரிவித்தார்.

அத்தோடு நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அனைத்து
பிரஜைகளுக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்வதே
நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி என கூறியமை மூலம் அரசாங்கம்
முடக்கத்தை நீடிக்காது என புலப்படுகின்றது.

இதற்கிடையில் இன்று இடம்பெறும் கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் நாடு
தழுவிய முடக்கத்தை நீட்டிப்பதற்கு பதிலாக சில பகுதிகளை மட்டும்
முடக்குவது குறித்த முன்மொழிவு முன்வைக்கப்படும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று
(வெள்ளிக்கிழமை) பிற்பகல் இறுதி முடிவை அறிவிப்பார் என அறியமுடிகின்றது.

அவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படாவிட்டால் எதிர்வரும்
திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு கட்டுப்பாடுகள் அனைத்தும்
நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

A/L மற்றும் புலமை பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் நீடிப்பு .

Next Post

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை நீடிப்பு .

Next Post

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை நீடிப்பு .

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.