Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஐ.எம்.எப்பின் நிபந்தனையை மீறினால் 500 ரூபாவாக உயரும் டொலரின் பெறுமதி : ரணில் அறிவிப்பு

September 11, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஐ.எம்.எப்பின் நிபந்தனையை மீறினால் 500 ரூபாவாக உயரும் டொலரின் பெறுமதி : ரணில் அறிவிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளை மீறி சந்தையில் பணம் வாங்கினால் டொலரின் பெறுமதி 500 ரூபாவாக உயர்வடையும் என ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

குருநாகலில் (Kurunegala) நேற்று (10) நடைபெற்ற அந்த மாவட்ட அறிஞர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடான கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களின்படி நாம் செயற்பட்டால், கடன் பெறுவதற்கான தேவைகள் குறைவாகவே இருக்கும்.

வரவு செலவுத் திட்டம்அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின்படி எதிர்காலத்தில் இந்நாட்டின் செலவு 6,800 பில்லியன் ரூபாவாகவும், வருமானம் 5,100 பில்லியன் ரூபாவாகவும் காணப்படுவதோடு, இடைவெளி 1700 பில்லியன் ரூபாவாகக் காணப்படும்.

இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாகும். எனவே, இந்த இடைவெளியை நிரப்பும் இயலுமையும் எமக்கு உள்ளது.ஆனால் ஜேவிபி தருவதாக கூறும் நிவாரணங்களை வழங்கினால் செலவு 8,900 கோடி ரூபாவாகவும், வருமானம் 4,900 பில்லியன் ரூபாவாகவும் காணப்படும். அதன்படி வரவு செலவுத் திட்ட இடைவெளி 4000 பில்லியன் ரூபாவாக அமையும்

சர்வதேச நாணய நிதியம்

இந்த இடைவெளி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.9 சதவீதமாக காணப்படும். இவ்வாறான பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறி சந்தையில் பணம் வாங்கினால், வட்டி 25 சதவீதமாக இருக்கும். அதனால் டொலரின் பெறுமதி 500 ரூபாவாக உயர்வடையும்.சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகளை மீறிவிட்டால் அவர்களின் ஆதரவு இரத்தாகும். அதனால் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி நகரும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.“ என தெரிவித்தார்.

Previous Post

வன்னியில் ஓரங்கட்டப்படும் மலையகத் தமிழர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்! 

Next Post

கடலுக்கு செல்ல வேண்டாம்…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post
கடலுக்கு செல்ல வேண்டாம்…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடலுக்கு செல்ல வேண்டாம்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.