அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் தற்போதைய மின்வெட்டை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளது என்று பெற்றோலியம் மற்றும் துறைமுக நல்லிணக்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளின் அளவு இழக்கப்பட்டுள்ளது என்று தொழிற்சங்க கூட்டமைப்பின் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதைய எரிபொருள் விநியோகம் நாளையுடன் நிறைவடையவுள்ளது என்றும் மின்வெட்டை அதிகரிப்பதன் மூலம் ஓரளவு எரிபொருளை சேமிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருளை சேமிப்பதற்காக நேற்று குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடுதலாக ஒரு மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றார்.
Discussion about this post