Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

உலகில் பாஸ்போர்ட் இல்லாமல் உலக நாடுகளுக்கு பயணிக்ககூடியவர்கள்!

January 4, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
உலகில் பாஸ்போர்ட் இல்லாமல் உலக நாடுகளுக்கு பயணிக்ககூடியவர்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

உலகில் பாஸ்போர்ட் முறை தொடங்கப்பட்டு 102 ஆண்டுகள் ஆகிறது.

ஜனாதிபதி முதல் பிரதமர் வரை, அரசு பிரமுகர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்லும்போது, ​​அவர்களிடமும் ராஜதந்திர பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.

இந்த பூமியில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ள நிலையில், இந்த மூன்று பிரமுகர்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் தேவையில்லை என்ற சிறப்பு சலுகை உள்ளது.

இவர்கள் வெளிநாடு பயணம் செய்தால் பாஸ்போர்ட் பற்றி யாரும் அவர்களிடம் கேட்பதில்லை. மாறாக, ​அவர்களுக்கு கூடுதல் விருந்தோம்பல் மற்றும் முழு மரியாதையும் வழங்கப்படுகிறது.

முந்தைய காலங்களில் ஒரு நாட்டின் குடிமகன் மற்றொரு நாட்டிற்குச் செல்லும்போது, ​​அவரிடம் வலுவான ஆவணங்கள் இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் உலக நாடுகளிடையே இல்லை.

முதல் உலகப்போரும் நடந்து கொண்டிருந்த காலத்தில் தான் பாஸ்போர்ட் போன்ற நடைமுறையை உருவாக்குவது மிகவும் முக்கியம் என்பதை ஒவ்வொரு நாடும் புரிந்துகொள்ளத் தொடங்கியது.

1920 இல் திடீரென்று எல்லாம் மாறியது.

அமெரிக்கா தனது நாட்டிற்கு இரகசியமாக வரும் புலம்பெயர்ந்தோரை தடைசெய்யும் வகையில் உலகம் முழுவதும் பாஸ்போர்ட் போன்ற அமைப்பை உருவாக்க முன்முயற்சி எடுத்து வந்தது.

லீக் ஆஃப் நேஷன்ஸில் அமைப்பில் இது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. 1924 இல், அமெரிக்கா தனது புதிய பாஸ்போர்ட் முறையை வெளியிட்டது.

இப்போது பாஸ்போர்ட் என்பது வேறொரு நாட்டிற்கு பயணம் செய்யும் நபருக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டையாக மாறிவிட்டது.

அதில் அவரது பெயர், முகவரி, வயது, புகைப்படம், குடியுரிமை மற்றும் கையெழுத்து அனைத்தும் உள்ளன. அந்த நபர் செல்லும் நாட்டிற்கு அவரின் அடையாளத்தை கண்டுகொள்ள இது எளிமையான முறையாக மாறியது. தற்போது அனைத்து நாடுகளும் இ-பாஸ்போர்ட் வழங்கும் அளவிற்கு இந்த நடைமுறை முன்னேறியுள்ளது.

மூன்று சிறப்பு நபர்களுக்கு மட்டும் விலக்கு

உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்ல பாஸ்போர்ட் தேவையில்லாத அந்த 3 சிறப்பு நபர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பிரிட்டன் மன்னர், ஜப்பான் ராஜா மற்றும் ராணி ஆகிய மூவருக்கும் தான் இந்த சலுகை உள்ளது. பிரிட்டன் மன்னராக சார்லஸ் ஆவதற்கு முன்பு மறைந்த ராணி எலிசபெத்திடம் இந்த சலுகை இருந்தது.

சார்லஸ் பிரிட்டன் மன்னராக பதவியேற்றவுடன், அவரது செயலர் தனது நாட்டின் வெளியுறவு அமைச்சகம் மூலம் அனைத்து நாடுகளுக்கும் ஒரு ஆவணச் செய்தியை அனுப்பினார்.

இப்போது பிரிட்டனின் அரச குடும்ப தலைமை பொறுப்பில் மன்னர் சார்லஸ் இருக்கிறார், எனவே அவரை முழு மரியாதையுடன் எங்கும் செல்ல அனுமதிக்க வேண்டும்.

இதில் எந்த தடையும் இருக்கக்கூடாது. இவ்வாறு அனைத்து நாடுகளுக்கும் செய்தி அனுப்பப்பட்டது. பிரிட்டன் மன்னருக்கு இந்த உரிமை உள்ள நிலையில், அவரது மனைவிக்கு இந்த உரிமை இல்லை.

அவர்கள் வேறு நாட்டிற்குச் செல்லும்போது தூதரக பாஸ்போர்ட்டைத் தங்களிடம் வைத்திருக்க வேண்டும். இதேபோல், அரச குடும்பத்தின் முக்கிய நபர்களுக்கும் ராஜதந்திர பாஸ்போர்ட்களை வைத்திருக்க உரிமை உண்டு.

இந்த வகை பாஸ்போர்ட் வைத்திருப்பவருக்கு சிறப்பு கவனம் மற்றும் மரியாதை வழங்கப்படுகிறது.
எலிசபெத் ராணியாக இருந்தபோது ​​அவருக்கு இந்த பாஸ்போர்ட் சிறப்பு சலுகை இருந்தது. ஆனால் அவரது கணவரான இளவரசர் பிலிப் ராஜதந்திர பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.

பிரிட்டனில் அரச குடும்ப அரியணையில் அமர்ந்திருக்கும் நபருக்கே முதல் மரியாதை. ராணியின் கணவர் வாழ்நாள் இளவரசர் என்று அழைக்கப்படுகிறார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

ஜப்பான் பேரரசர் மற்றும் பேரரசி ஏன் இந்த சலுகையை எப்படி பெற்றனர் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
தற்போது ஜப்பானின் பேரரசராக இருப்பவர் நருஹிட்டோ. அவரது மனைவி மசாகோ ஓவாடா ஜப்பானின் பேரரசி.

தந்தை அகிஹிட்டோ பேரரசராக பதவி துறந்த பிறகு அவர் இந்த பதவியை ஏற்றுக்கொண்டார். அவரது தந்தை ஜப்பான் பேரரசராக இருக்கும் வரை, அவரும் அவரது மனைவியும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை இருந்தது.

88 வயதான அகிஹிட்டோ 2019 ஆம் ஆண்டு வரை ஜப்பானின் பேரரசராக இருந்தார், அதன் பிறகு அவர் பேரரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். எனவே, இப்போது அவர்கள் வெளிநாடு செல்லும்போது தூதரக பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.

1971 ஆம் ஆண்டு முதல் வெளியுறவு அமைச்சகம் தனது பேரரசர் மற்றும் பேரரசிக்கு இந்த சிறப்பு ஏற்பாட்டைத் தொடங்கியதாக ஜப்பானின் அரசு ஆவண பதிவுகள் காட்டுகின்றன.

ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிரிட்டனில் உள்ள கிங்ஸ் செயலகம் இம்மூவரும் வெளிநாடு செல்லும் பட்சத்தில் திட்டம் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட நாட்டிற்கு முன்கூட்டியே அனுப்புகிறது.

உலகின் அனைத்து நாட்டு பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும்போது ​​அவர்கள் பாஸ்போர்ட்களை வைத்திருக்க வேண்டும்.

அவர்களின் பாஸ்போர்ட்கள் தூதரக பாஸ்போர்ட்களாக இருக்கும். இந்த தலைவர்களுக்கு பயணம் செல்லும் நாடு முழு சலுகைகளையும் வழங்குகிறது.

இந்த தலைவர்களுக்கு பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பிற நடைமுறைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் இந்த அந்தஸ்து பிரதமர், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு உண்டு.

இந்தியா மூன்று ரக பாஸ்போர்ட்டை வழங்குகிறது.

சாதாரண மக்களுக்கு நீல நிற பாஸ்போர்ட் இருக்கும். அரசாங்கத்துடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ பாஸ்போர்ட், ராஜதந்திர பாஸ்போர்ட் மெரூன் நிறத்தில் இருக்கும்.

மூன்றாவதாகே உச்சபட்ச சலுகை கொண்ட பாஸ்போர்ட் நாட்டின் பிரதமர், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது.

Tags: #Passport#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsindiasrilanka
Previous Post

மட்டக்களப்பில் யானையால் மீன் வியாபாரி ஒருவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Next Post

இன்று முதல் ஆரம்பமாகும் க. பொ. த உயர்தரப் பரீட்சை

Next Post
இன்று முதல் ஆரம்பமாகும் க. பொ. த உயர்தரப் பரீட்சை

இன்று முதல் ஆரம்பமாகும் க. பொ. த உயர்தரப் பரீட்சை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.