Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

உணவு பாதுகாப்பிற்கான அவசரகால சட்டம் இராணுவமயமாக்கலை தீவிரப்படுத்தும்: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

September 14, 2021
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நேற்று (13) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 48
ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் வாய்மூல அறிக்கை
முன்வைக்கப்பட்டது.

இதன்போது சமூக, பொருளாதார ஆட்சியில் இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள
சவால்கள் இராணுவமயமாக்கலின் பாரிய தாக்கத்தை பிரதிபலிப்பதாக ஐ.நா மனித
உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாட்டிற்காக அவசரகால சட்டம்
விதிக்கப்பட்டமை இராணுவமயமாக்கலை தீவிரப்படுத்தும் என ஆணையாளர் விசனம்
வௌியிட்டார்.

அடிப்படை உரிமைகள், சமூக கருத்தாடல், ஜனநாயக நிறுவனங்கள், சமூக
ஒருங்கிணைப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றில்
பொறுப்புக்கூறல் இன்மை தொடர்வதாகவும் மிச்செல் பெச்சலட் குறிப்பிட்டார்.

உணவு பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு ஆகியவற்றை நோக்காகக் கொண்டு, ஆகஸ்ட்
மாதம் 30 ஆம் திகதி இலங்கையில் அவசரகால சட்ட விதிமுறைகள்
அறிவிக்கப்பட்டன. இந்த அவசரகால நிலையின் விதிகள் மிகவும் பரந்துபட்டவை
என்பதுடன், சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தின் பங்களிப்பை மேலும்
விரிவாக்கக்கூடியவை என அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இராணுவத்தின் நடவடிக்கைகளை ஐ.நா அலுவலகம் உன்னிப்பாகக்
கண்காணிக்கும் எனவும் அவர் கூறினார்.

இலங்கையில் சிவில் சமூகக் கருத்தாடலுக்கான வழிகள், பரந்த
கலந்துரையாடல்கள் மூலம் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய மிச்செல்
பெச்சலட், துரதிர்ஷ்டவசமாக மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள்
மற்றும் காணாமற்போனவர்களின் குடும்பங்கள் மீதான கண்காணிப்பு, மிரட்டல்,
நீதித்துறை துன்புறுத்தல் ஆகியவை தொடர்வது மாத்திரமல்லாமல், மாணவர்கள்,
கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், மதத் தலைவர்கள் ஆகியோரின் அரசாங்கக்
கொள்கைகள் மீதான விமர்சனங்களுக்கு பாரிய வரையறைகளும் காணப்படுவதாக
சுட்டிக்காட்டினார்.

பல சாத்வீக போராட்டங்கள், நினைவுகூரல்களில் கலந்துகொண்டவர்கள்
பலவந்தமாகக் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களில் தடுத்து
வைக்கப்பட்டதை நினைவுகூர்ந்த ஆணையாளர், சிவில் சமூகக் குழுக்கள் மீது
புதிய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கவலை வௌியிட்டார்.

அடிப்படை சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம்
என்ற அச்சம் பரவலாக நிலவுவதாகவும் அவர் கூறினார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம்
சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை இலங்கை அரசாங்கம் விரைவுபடுத்த
வேண்டும் எனவும் மிச்செல் பெச்சலட் வலியுறுத்தினார்.

இதேவேளை, இலங்கையின் பொறுப்புக்கூறலை பாதுகாப்பு சபைக்கு நகர்த்தி
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சிகள்
மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள்
ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயம் தொடர்ந்தும்
இருப்பதால், சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்ற விடயமாக, தொடர்ச்சியாக
உயிர்ப்புடன் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் கடந்த 27ஆம் திகதி அனுப்பி வைத்துள்ள பதிலளிப்பு
அறிக்கையிலுள்ள விடயங்கள் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும்
செயற்பாடுகளுக்கு முற்றிலும் முரணானவை என அவர் விடுத்துள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாதாரண நிலைமைகளின் போது இளைஞர்கள், யுவதிகள் உள்ளிட்டோர் வலிந்து
காணாமலாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் உண்மையை கண்டறியவோ
அவர்களின் குடும்பங்களுக்கு நீதியை பெற்றுத்தரவோ அரசாங்கம் செயற்படவில்லை
எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

குறைந்த விலைக்கு அரச நிறுவுனங்களின் ஊடாக ஆடைகள்.

Next Post

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் யாழ். அலுவலகத்தை மீள திறக்குமாறு வடக்கு, கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை

Next Post

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் யாழ். அலுவலகத்தை மீள திறக்குமாறு வடக்கு, கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.