Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறும் மக்கள்!! – 6 லட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்!!

August 6, 2022
in இலங்கை
இலங்கையை விட்டு வெளியேறும் மக்கள்!! – 6 லட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் இவ்வருடம் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 லட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இது பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதற்கான முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் இதே காலப்பகுதியில் இலங்கையில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 192 கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்பட்டன.

அந்தவகையில் இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் கடவுச்சீட்டு வழங்கல் 33 வீதத்தால் அதிகரித்து 5 லட்சத்து 90 ஆயிரத்து 260 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஜூலை மாதத்தில் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை கடவுச்சீட்டுக்காக மொத்தம் ஒரு இலட்சத்து ஆயிரத்து 777 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

அதில் 98 ஆயிரத்து 124 பேருக்கு மாத்திரமே கடவுச்சீட்டுக்களை வழங்க முடிந்துள்ளது என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார். திணைக்கள வரலாற்றின்படி, அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுக்கள் 2016 இல் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அந்த ஆண்டில் 6 லட்சத்து 58 ஆயிரத்து 725 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த ஆண்டின் ஏழு மாதங்களில் 5 லட்சத்து 90 ஆயிரத்து 260 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமையால், 2016ஆம் வருடத்தின் சாதனை முறியடிக்கப்படவுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியின் அண்மைய அறிக்கையின்படி, இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 701 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளனர்.

எனினும், 2021ஆம் ஆண்டு முழுவதும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 952 பேர் மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காகச் சென்றுள்ளனர்.

Tags: இலங்கைகடவுச்சீட்டுபொருளாதார நெருக்கடிவிநியோகம்வெளியேறும் மக்கள்
Previous Post

இலங்கையை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பில் ரணிலின் அறிவிப்பு!!

Next Post

இலங்கையில் தலையணையுடன் எரிபொருள் பெற வந்த பெண்!!

Next Post
இலங்கையில் தலையணையுடன் எரிபொருள் பெற வந்த பெண்!!

இலங்கையில் தலையணையுடன் எரிபொருள் பெற வந்த பெண்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.