இலங்கையை மீட்பதற்கான பேச்சுவார்த்தையைத் துரிதமாக ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைப் பணிப்பாளர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் சிறப்பான தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள அவர், இலங்கையில் அரசாங்கம் ஒன்று அமைந்துள்ளதால் அந்தப் பேச்சுக்களைத் தொடர முடியும் என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post