Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் நாளாந்தம் 500 டொலர்கள் செலவிடக் கூடிய வெளிநாட்டவர்கள்

April 10, 2024
in இலங்கை
இலங்கையில் நாளாந்தம் 500 டொலர்கள் செலவிடக் கூடிய வெளிநாட்டவர்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

2019 ஆம் ஆண்டில், 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். அந்த இலக்கை மீண்டும் அடைய முடியும். இத்தொகையை 25 இலட்சமாக அதிகரிக்கவும் வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஐம்பது இலட்சமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க(Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.

இதன்போது நாளாந்தம் 500 டொலர்கள் வரையில் செலவு செய்யக்கூடிய சுற்றுலா பயணிகளை அழைத்து வரவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கொழும்பு முகத்துவாரத்தில் நேற்று (09) நடைபெற்ற ரன்திய உயன வீட்டுத் தொகுதியை பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார ஸ்திரத்தன்மை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு சுமூகமான நிலைக்கு வந்துள்ளது. நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஜனாதிபதி ஏற்படுத்தினார்.

அவருக்கு இருக்கின்ற சர்வதேச தொடர்புகளே அதற்கு காரணமாகும். மேலும், மற்றொரு பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் இருக்கும் வகையிலான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இலங்கையின் பொருளாதாரம் மீது நம்பிக்கை இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இன்று நம்பிக்கையுடன் நாட்டிற்கு வருகிறார்கள்.

அத்துடன், இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களை ஜனாதிபதி ஏற்கனவே தயாரித்துள்ளார். அதன் மூலம் வருமானத்தைப் பலப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். 2019 ஆம் ஆண்டில், 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

அந்த இலக்கை மீண்டும் அடைய முடியும். இத்தொகையை 25 இலட்சமாக அதிகரிக்கவும் வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஐம்பது இலட்சமாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது நாளாந்தம் 500 டொலர்கள் வரையில் செலவு செய்யக்கூடிய சுற்றுலா பயணிகளை அழைத்து வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு துறைமுகத்தின் ஊடாக தென்னிந்தியாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை ஜனாதிபதி ஏற்கனவே ஆரம்பித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தங்க விசா திட்டம் ரத்து செய்யும் பட்டியலில் இணைந்து கொள்ளும் நாடு

Next Post

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Next Post
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.