Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆய்வு கட்டுரைகள்

இலங்கையில் சீனாவின் மிகப்பெரிய துறைமுக முதலீடு

July 30, 2023
in ஆய்வு கட்டுரைகள், இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கையில் சீனாவின் மிகப்பெரிய துறைமுக முதலீடு
0
SHARES
Share on FacebookShare on Twitter

சீனாவின் இராணுவம் இலங்கையில் தனது இரண்டாவது வெளிநாட்டு கடற்படைத் தளத்தை உருவாக்க வாய்ப்பு உள்ளதென சர்வதேச அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வேர்ஜீனியாவின் வில்லியம் மேரி கல்லூரியின் எய்ட்டேட்டா ஆய்வகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்றவற்றில் சர்வதேச வர்த்தகத்தை பாதுகாக்க துறைமுகம் மற்றும் துறைமுக உள்கட்டமைப்பை நிறுவுவதில் சீன வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளதாக ஆய்வு செய்த புதிய அறிக்கையின்படி சீனாவின் அடுத்த வெளிநாட்டு துறைமுகம் இலங்கையில் அமையலாம் என தெரிவித்துள்ளது.

உலகளாவிய அபிலாசைகளை பாதுகாத்தல் – சீனாவின் துறைமுக தடம் மற்றும் எதிர்கால வெளிநாட்டு கடற்படை தளங்களுக்கான தாக்கங்கள் என்ற ஜூலை மாத அறிக்கையில் சீனாவின் அடுத்த வெளிநாட்டு கடற்படை தளம் எங்கு அமையலாம் என எட்டு இடங்களை குறிப்பிட்டுள்ளன.

வேர்ஜீனியாவின் வில்லியம் மேரி கல்லூரியின் எய்ட்டேட்டா ஆய்வகம் சீனாவின் வெளிநாட்டு கடற்படை தளம் இலங்கையில் அமைவதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பில் அவ்வறிக்கையில்,

“இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திலேயே சீனாவின் அடுத்த வெளிநாட்டு தளம் அமையலாம்.
இதற்காக சீனா 2.19 பில்லியன் அமெரிக்க டொலர்களை அங்கு முதலீடு செய்துள்ளது.

பாகிஸ்தான் கமரூன் ஆகியநாடுகளில் இரண்டு முதல் ஐந்துவருடங்களில் தளங்கள் அமைய வாய்ப்புள்ளது.

சீனாவின் உலகிலேயே மிகப்பெரிய பாரிய துறைமுக முதலீடு அம்பாந்தோட்டையே என்பதோடு சீனா நேரடி கட்டுப்பாட்டை செலுத்துகின்றது.

மூலோபாய அடிப்படையில் அமைந்துள்ளதாலும் உயர்வர்க்கத்தினர் பொதுமக்கள் சீனா மீது அதிக நாட்டம் கொண்டுள்ளதாலும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் வாக்கெடுப்புகளில் இரண்டு நாடுகளிற்கும் இடையில் நல்லுறவு காணப்படுவதாலும் அம்பாந்தோட்டையே அடுத்த சீனாவின் தளம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: #China#ChinaPort#Hambantota#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

4 பிரச்சனைகளை தீர்க்கும் பீட்ரூட் ஜூஸ்!

Next Post

இந்திய – இலங்கை நில இணைப்பால் கிட்டவுள்ள நன்மை

Next Post
இந்திய – இலங்கை நில இணைப்பால் கிட்டவுள்ள நன்மை

இந்திய - இலங்கை நில இணைப்பால் கிட்டவுள்ள நன்மை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.