Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் உணவு பொருட்களால் ஆபத்து

June 20, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கையில் உணவு பொருட்களால் ஆபத்து
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் அதிக இலாபம் பெறும் நோக்கில் வர்த்தகர்கள் செய்யும் அதிர்ச்சி செயல் தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கமைய, மிளகாய் தூளில் கோதுமை மா கலப்பு, உப்பு மற்றும் சாயங்களை பயன்படுத்துவதையும், வெள்ளை சீனியை சிவப்பு சீனியாக மாற்ற அளவிற்கு அதிகமான சாயங்களை பயன்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் மிளகாய் தூளில் 40 சதவீதமும், சிவப்பு சீனியில் 40-50 சதவீதமும் தீங்கு விளைவிக்கும் சாயங்கள் கலந்திருப்பதாகவும் அவை புற்று நோயை உண்டாக்கும் ஆபத்துக்களை கொண்டுள்ளதென தெரியவந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் சிற்றுண்டிகளுடன் சாப்பிட வழங்கப்படும் தக்காளி சோஸ்களில் பெரும்பாலும் தக்காளி இல்லை என்றும் அதிகப்படியான உப்பு, மா மற்றும் நிற கலவைகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மிளகாய் தூள், சிவப்பு சர்க்கரை மற்றும் தக்காளி சோஸ் போன்றவைகளில் போலி சுவைகள் மற்றும் வண்ணங்கள் குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும். அவை பிரகாசமான நிறத்தில் இருந்தால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மிளகாய்த் தூள், சிவப்பு சீனி, தக்காளி சோஸ் போன்றவற்றில் போலியான சுவையூட்டிகள் மற்றும் வண்ணம் சேர்த்து விற்பனை செய்த பெருமளவிலான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சில வழக்குகளின் தீர்ப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வர்த்தகர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் ரொஷான் குமார மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: #Colombo#FastFood#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

மூடப்படும் அபாயத்தில் 40 டிப்போக்கள் !

Next Post

புலம்பெயர் பயணிகள் படகு கவிழ்ந்து 300 பேர் பலி

Next Post
புலம்பெயர் பயணிகள் படகு கவிழ்ந்து 300 பேர் பலி

புலம்பெயர் பயணிகள் படகு கவிழ்ந்து 300 பேர் பலி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.