Friday, May 30, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆய்வு கட்டுரைகள்

இலங்கையில் இது தான் நிலைமை!-

May 26, 2023
in ஆய்வு கட்டுரைகள், இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கையில் இது தான் நிலைமை!-
0
SHARES
Share on FacebookShare on Twitter

மணிமுடியையும் மன்னராட்சியையும் துறந்து சந்நியாசம் பூண்ட புத்தரின் பின்பற்றல்கள் மணிமுடியிலும மன்னராட்சியிலும் பெருவிருப்பம்கொண்டு அதற்காகத் தவம் கிடக்கின்றனர்.

நாட்டைத்துறந்து துறவு பூண்ட புத்தரின் போதனைகளைத் தினம் சொல்லும் புத்த பிக்குகள் பிற சமயத் தலங்களையும், நிலங்களையும் தமதாக்கும் கைங்கரியத்தில் ஓயாது இயங்குகின்றனர்.

10 கட்டளைகளையும் பெருமைக்குச் சொல்லும் சிங்கள பௌத்தர்கள் எந்தப்போதனைகளையும் பின்பற்றுவதும் இல்லை.

ஜனனாயக சோசலிசக் குடியரசு பெயருக்கு மட்டும் வைத்திருக்கும் இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்கமே தலைவிரித்தாடுகின்றது.

சைவ ஆலயங்கள் இடிக்கப்படுகின்றது, தெய்வச் சிலைகள் உடைக்கப்படுகின்றது, பல்லாண்டுகளாக வழிபட்ட ஆலயங்களில் வழிபாடு தடுக்கப்படுகின்றது. பாரம்பரிய சைவ ஆலயங்கள் தொல்பொருள் எனும்பெயரில் தினம் தினம் அபகரிக்கப்படுகின்றது. புராதன சைவ ஆலயங்கள் மண்ணோடு மண்ணாக்கப்படுவதுடன் அவ்விடத்தில் வானுயர்ந்த விகாரைகள் கட்டப்படுகின்றது.

ஒற்றைப்பௌத்த சிங்களக்குடிமகனும் இல்லாத பாரம்பரிய தமிழர் நிலத்தில் விகாரைகள் கட்டப்படுகின்றது. குடிக்கு ஒரு கெடுதிவந்தால் தெய்வத்திடம் வேண்டலாம் ஆனால் தெய்வத்திற்கே சோதனைவந்தால் யார்தான் என்னசெய்யமுடியும்.

சர்வதேசச் சட்டங்களை குழிதோண்டிப்புதைத்து விட்டு முள்ளிவாய்காலில் கோரத்தாண்டவம் ஆடிய பௌத்த சிங்களத்தை உலகநாடுகள் தட்டிக்கேட்கவும் இல்லை – தடுக்கவும் இல்லை.

மனித உரிமைகள் என்னவிலை எனக்கேட்கும் இந்த நாட்டில் யாரிடம் யார் நீதிகேட்கமுடியும்? நீதி என்ற சொல்லின் அர்த்தம் புரியாத நாட்டில் எது நீதியாக இருக்கமுடியும். காணமல் ஆக்கப்பட்டோருக்கு யார் நீதி தருவார்? அநியாயமாகக் கொல்லப்பட் பச்சிளம் பாலகர் முதல் பொல்லுடன் நடந்த முதியவருக்கும் யார் நீதி கொடுப்பார்கள், பாலியல் வன்புணர்வு செய்து வக்கிரக் கொலைகளுக்கு இந்த நாட்டின் நீதிப்புத்தகத்தில் என்ன தண்டனை உள்ளது?

பாட்டன் பூட்டன் காலம் முதல் தமிழ்குழவி புரண்டுவிளையாடிய நிலம் இன்று இராணுவத்தின் கையில், படையினர் இரும்புவேலிக்குள்.

இந்த நிலையில் இங்கு ஏது நல்லிணக்கம்? எங்கும் அடக்குமுறை எல்வாற்றிலும் மேலாதிக்கம். ஒவ்வொரு அடிப்படைத் தேவைக்கும் தமிழன் போராடியே ஆகவேண்டும் எனும் நிலை, மக்கள் போராட்டம் பயங்கரவாதச்சட்டம் கொண்டு ஒடுக்கப்படும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் வழியிலேயே போராடும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்ட்டுள்ளனர்.

போராடும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இங்கு சிறப்புரிமையும் இல்லை – பாதுகாப்பும் இல்லை. நிலத்தில் வாழ முடியவில்லை, கடலில் தொழில் செய்யமுடியவில்லை, வீதியில் நடமாடமுடியவில்லை, காட்டில் பயணிக்கமுடியவில்லை, ஆலயத்தில் வழிபடமுடியவில்லை என இந்த நாட்டில் தமிழர்களுக்கு இல்லை…… இல்லைகள் மட்டுமே இருக்கின்றது.

அகிம்சை தோற்றது, ஆயுதமும் மௌனித்தது, உடன்பாடுகளும் உதறித்தள்ளப்பட்டது.

Tags: #Buddhism#CurrentSituation#SriLankanTamils#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

வவுனியாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

Next Post

கனடாவில் பச்சை மிளகாய் குறித்து எச்சரிக்கை

Next Post
கனடாவில் பச்சை மிளகாய் குறித்து எச்சரிக்கை

கனடாவில் பச்சை மிளகாய் குறித்து எச்சரிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.