Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையிலிருந்து புறப்படவிருந்த விமானத்தின் கழிவறையில் சிக்கிய கறுப்பு நிற மர்ம பொதி!

November 11, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெறவுள்ள அதிரடி மாற்றம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்க ஓடுபாதையில் தயாராக இருந்த விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மர்மப் பொதி ஒன்று காணப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவின் விமான சேவைக்கு சொந்தமான AI 272 விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி  (10-11-2023) பிற்பகல் 01.35க்கு பயணத்தை ஆரம்பிக்க தயாராக இருந்தது.

இலங்கையிலிருந்து புறப்படவிருந்த விமானத்தின் கழிவறையில் சிக்கிய கறுப்பு நிற மர்ம பொதி! | Katunayake Airport Chennai Flight Lavatory Item

ஓடுபாதையில் விமானம் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், விமானத்தின் கழிவறைக்குள், சந்தேகத்திற்கிடமான மர்மப் பொதி ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டது.

விமானத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என எழுந்த சந்தேகத்தை அடுத்து, சென்னைக்கான பயணத்தை இடைநிறுத்தி, விமானம் மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பான இடத்தை நோக்கி செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து புறப்படவிருந்த விமானத்தின் கழிவறையில் சிக்கிய கறுப்பு நிற மர்ம பொதி! | Katunayake Airport Chennai Flight Lavatory Item

விமானத்தில் இருந்த பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினர் விமானத்திற்குள் அழைக்கப்பட்டு சோதனைகளை முன்னெடுத்தனர்.

குறித்த பொதி தொடர்பில் நடாத்தப்பட்ட சோதனைகளின் போது, குறித்த பொதியிலிருந்து 2 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டதுடன், அவை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து புறப்படவிருந்த விமானத்தின் கழிவறையில் சிக்கிய கறுப்பு நிற மர்ம பொதி! | Katunayake Airport Chennai Flight Lavatory Item

 

இச் சம்பவம் குறித்து இதுவரை எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை.

இதனையடுத்து, விமானம் முழுவதும் சோதனைக்குட்படுத்தப்பட்டதை அடுத்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, சென்னை நோக்கி குறித்த விமானம் மாலை 4.43 க்கு விமானம் பயணத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: #Airport#Colombo#KatunayakeAirport#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

கொட்டிதீர்க்கப்போகும் கன மழை : நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

Next Post

அதிகாரிகளுக்கு ரணிலின் உத்தரவு

Next Post
வெடிக்கவுள்ள போராட்டம் -ரணிலிடம் சென்றது இரகசிய அறிக்கை

அதிகாரிகளுக்கு ரணிலின் உத்தரவு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.