Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? -அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

July 10, 2022
in இலங்கை
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? -அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதிக்கான பதவிகாலம் உத்தியோகப்பூர்வமாக நிறைவடைவதற்குள், அப்பதவியில் வெற்றிடம் ஏற்படும் பட்சத்தில், புதிய ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுவார் என்பது தொடர்பான சட்ட விளக்கம் வெளியாகியுளளது.

அரசமைப்பில் அதற்காக உள்ள ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் இன்று (10) விளக்கமளித்தார்.

ஜனாதிபதியொருவர் பதவி விலகுவதாக இருந்தால், அது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை தனது கையொப்பத்துடன் சபாநாயகரிடம் கையளிக்க வேண்டும். அப்போதுதான் பதவி வெற்றிடம் ஏற்படும்.

அதன்பின்னர் பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்பட முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்படலாம்.

ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டு, ஒரு மாதத்துக்குள், நாடாளுமன்றம் ஊடாக புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்து கொள்ள வேண்டும்.

இலங்கை வரலாற்றில் ஒரு தடவை மாத்திரமே ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. 1993 மே முதலாம் திகதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட பின்னர், பதில் ஜனாதிபதியாக டிபி விஜேதுங்க செயற்பட்டார். அதன்பின்னர் அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

அந்த காலப்பகுதியில் ஜனாதிபதி பதவிக்கு டிபி விஜேதுங்க மட்டுமே, நாடாளுமன்ற செயலாளரிடம் வேட்பு மனு கையளித்திருந்தார். எனவே, அவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும்பட்சத்தில், 50 வீதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெறுபவர் அப்பதவிக்கு தெரிவு செய்யப்படுவார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் வாக்காளர்கள், . 225 பேர் வாக்களிப்பில் பங்கேற்றால் 113 வாக்குகளைப் பெறுபவர் ஜனாதிபதியாவார். ஜனாதிபதி தேர்தலில்போன்றே 1,2,3 என விருப்பு வாக்குகளை பயன்படுத்தலாம். 4 வரை செல்லமுடியும்.

இதில் எவராவது 50 வீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றால் ஜனாதிபதியாவார். எவரும் 50 வீத வாக்குகளைப் பெறாதபட்சத்தில், ஜனாதிபதி தேர்தலைபோன்றே, பட்டியலில் இறுதியாக உள்ளவருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் உள்ள 2 ஆம் விருப்பு வாக்கு கருத்தில் கொள்ளப்படும். இவ்வாறு 50 வீதம்வரும்வரை எண்ணிக்கை இடம்பெறும். இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணி விளக்கமளித்தார்.

Tags: இலங்கை சட்டத்தரணிசட்ட விளக்கம்சாலிய பீரிஸ்ஜனாதிபதி
Previous Post

இலங்கை தலைவர்களுக்கு அமெரிக்காவின் முக்கிய வேண்டுகோள்!!

Next Post

நாளை மீண்டும் கட்சி தலைவர்கள் கூட்டம்!!

Next Post
நாளை மீண்டும் கட்சி தலைவர்கள் கூட்டம்!!

நாளை மீண்டும் கட்சி தலைவர்கள் கூட்டம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.