Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கைக்கு வந்த நற்செய்தி : மகிழ்ச்சியில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு

December 14, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கைக்கு வந்த நற்செய்தி : மகிழ்ச்சியில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவியின் இரண்டாம் கொடுப்பனவிற்கு அனுமதி கிடைக்கப் பெற்றதன் மூலம், வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வங்குரோத்து அடைந்துள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை குறுகிய காலப்பகுதியில் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக நேற்று நாடாளுமன்றில் விசேட உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணை கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை தற்போது கடன் நிலைத்தன்மையை அடைந்துள்ளதாக இது தொடர்பில் நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நிதியத்தின் உடன்படிக்கைகளை நாம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைபடுத்தியிருந்தால் இன்று இலங்கை நெருக்கடியை எதிர்நோக்கியிருக்காது. இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு எனும் பெயரிலிருந்து வெளிவர நடவடிக்கைகள் எடுத்துள்ளதை தற்போது நிதியம் ஒப்பு கொண்டுள்ளது.

இந்த நாட்டை பொறுப்பேற்க வேறு எந்த தலைவரும் முன்வரவில்லை. இதன் போது, எனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினரும் நாடாளுமன்றில் இருக்கவில்லை. எனினும், தற்போது நாடாளுமன்றில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் எனக்கு ஆதரவளித்தனர்.

இந்த நிலையில், தற்போது நாம் வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளோம். சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை நாம் பெற்றுக் கொண்ட செயல்முறையில், எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் இந்த வெற்றியில் பங்குண்டு என்றும் கூறினார்.

Tags: #Colombo#Imf Loan#Ranil#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

நாடுகடத்தும் புகலிடக்கோரிக்கையாளர்களின் சட்டமூலம்: கிடைத்த முதல் வெற்றி

Next Post

இசை நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள நடிகை ரம்பா : இலங்கைக்கு வருகை தந்தமை எண்ணி மகிழ்ச்சி

Next Post
இசை நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள நடிகை ரம்பா : இலங்கைக்கு வருகை தந்தமை எண்ணி மகிழ்ச்சி

இசை நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள நடிகை ரம்பா : இலங்கைக்கு வருகை தந்தமை எண்ணி மகிழ்ச்சி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.