Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கைக்கு வந்து குவிந்த வெளிநாட்டு கப்பல்கள்

August 13, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கைக்கு வந்து குவிந்த வெளிநாட்டு கப்பல்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

 வெளிநாட்டு கப்பல்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும், இலங்கை(sri lanka) இந்த ஆண்டு குறைந்தது 12 வெளிநாட்டு கப்பல்களை தனது துறைமுகங்களில் நிறுத்த பாதுகாப்பு அனுமதியை வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஜனவரி 1, 2024 முதல், இந்தியா(india) மற்றும் அமெரிக்காவின்(us) பாதுகாப்புக் கவலைகள் , குறிப்பாக சீனக்(china) கண்காணிப்புக் கப்பல்களின் அடிக்கடி வருகை காரணமாக வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இலங்கை ஓராண்டு தடை விதித்தது.

இந்திய நீர்மூழ்கி கப்பலின் வருகை

இதுவரை, இலங்கை 12 வெளிநாட்டுக் கப்பல்களை துறைமுகத்தில் நிறுத்த அனுமதித்துள்ளது, அண்மையில் இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் (INS) ஷல்கி, ஓகஸ்ட் 2 அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

2023ஆம் ஆண்டு இரண்டு சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு எந்த சீனக் கப்பல்களும் இலங்கைக்கு வரவில்லை.

தடை விதிக்கப்படுவதற்கு முன்னர் கடந்த வருடம் 32 வெளிநாட்டு கப்பல்கள் இலங்கையில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் இந்தியாவிலிருந்து ஒரு டசின் கப்பல்களும், அமெரிக்காவிலிருந்து ஐந்து கப்பல்களும், ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து தலா மூன்று கப்பல்களும் அடங்கும். மேலும், பிரான்ஸ், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து தலா இரண்டு கப்பல்களும், அல்ஜீரியா, இங்கிலாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று கப்பல்களும் 2023 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை இலங்கை துறைமுகங்களுக்கு வந்துள்ளன.

அலி சப்ரியின் அறிவிப்பு

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,(ali sabry) அடுத்த ஆண்டு வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களின் அனுமதிக்கான கோரிக்கைகளுக்கு இலங்கை மீண்டும் அனுமதி வழங்கும் என்று சமீபத்தில் அறிவித்தார்.

வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு விதிகளை இலங்கையால் விதிக்க முடியாது என்றும் சர்வதேச சர்ச்சைகளில் பக்கபலமாக இருக்கப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்கள் மீதான தற்போதைய தடை, ஜனவரி 2025 இல் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

உலக புகைப்பட நாளை முன்னிட்டு றீ(ச்)ஷா வழங்கும் சிறந்த வாய்ப்பு…ஒரு இலட்சம் ரூபாவை வெல்லுங்கள்

Next Post

இரண்டு வருடங்களாக 13 வயது பாடசாலை மாணவி வன்புணர்வு : 60 வயது தாத்தா உட்பட ஐவர் கைது

Next Post
இரண்டு வருடங்களாக 13 வயது பாடசாலை மாணவி வன்புணர்வு : 60 வயது தாத்தா உட்பட ஐவர் கைது

இரண்டு வருடங்களாக 13 வயது பாடசாலை மாணவி வன்புணர்வு : 60 வயது தாத்தா உட்பட ஐவர் கைது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.