Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

இன்று ஹர்த்தால் நாடு முடங்கும்!- போக்குவரத்துகளும் ஸ்தம்பிக்கும் வர்த்தர்களும் ஆதரவு!!

May 6, 2022
in முக்கியச் செய்திகள்
இன்று ஹர்த்தால் நாடு முடங்கும்!- போக்குவரத்துகளும் ஸ்தம்பிக்கும் வர்த்தர்களும் ஆதரவு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இன்று ஹர்த்தால் நாடு முடங்கும்!- 2000 தொழிற்சங்கங்கள் இணைவு!!

இன்று முன்னெடுக்கப்படவுள்ள 24 மணிநேர ஹர்த்தாலுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் நாடு இன்று முற்றாக ஸ்தம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ், அரசாங்க, அரை அரசாங்க நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஆடைத் தொழில் துறையைச் சேர்ந்தவர்களும் இந்த ஹர்த்தாலில் பங்கெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

அதேவேளை, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என ரயில் தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்தார்.

சகல ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வெள்ளிக்கிழமை பாடசாலை நாள் என்றாலும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வரவு இருக்காது என்பதால், மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்பலாமா இல்லையா? என்பதைப் பெற்றோர் – பாதுகாவலர் தீர்மானிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்யப் பணித்துள்ளன. பல நகரங்களில் வர்த்தக நிலையங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அநேகமான வர்த்தகர்கள் கடைகளை மூடி போராட்டத்துக்கு ஆதரவளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதார பணியாளர்களது சங்கமும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்ற போதும், மருத்துவமனைகளில் பணிகள் முன்னெடுக்கப்படும்.

தபால் ஊழியர்கள், கிராம சேவகர்கள், வங்கி சேவையாளர்கள் போன்ற துறையினரின் பல தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மருத்துவர்கள் போராட்டத்துக்கு ஆதரவளித்தாலும், அவசர சிகிச்சை நடவடிக்கைகள் இடம்பெறும். நண்பகலில் அடையாள போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாட்டின் அனைத்துத் துறைகளும் ஸ்தம்பிக்கும் என்றும், அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கும் வரையில் போராட்டங்கள் தொடரும் என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Tags: நாடு முடங்கும்போக்குவரத்துரயில் தொழிற்சங்க கூட்டணிவர்த்தர்கள் ஆதரவுஹர்த்தால்
Previous Post

யாழ். வர்த்தகர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள்!

Next Post

மாணவர்களை அடக்க முயற்சி நாடாளுமன்று அருகே பதற்றம்!!

Next Post
புதிய அமைச்சரவை திங்கள் பதவியேற்பு?

மாணவர்களை அடக்க முயற்சி நாடாளுமன்று அருகே பதற்றம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.