Thursday, May 29, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆய்வு கட்டுரைகள்

இந்தியா பாதுகாப்பாகவிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும்

December 13, 2023
in ஆய்வு கட்டுரைகள், இலங்கை, முக்கியச் செய்திகள்
இந்தியா பாதுகாப்பாகவிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்தியா பாதுகாப்பாகவிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சீனா கப்பல்கள் கொழும்பிற்கு செல்வது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்தியாவும் இலங்கையும் இந்து சமுத்திரத்தில் உள்ளமையினால் கடற்பயண சுதந்திரத்தை உறுதி செய்வது இரு நாடுகளினதும் கூட்டு பொறுப்பு என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரண்டு நாடுகளும் கடல்சார் சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பும் உறுதித்தன்மையும் காணப்பட்டால் அமைதியும் வளமும் காணப்படும் என தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது கூட்டு பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இலங்கையினதும் இந்தியாவினதும் பாதுகாப்பு பிரிக்க முடியாத பரஸ்பரம் ஒன்றிணைந்தது என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா பாதுகாப்பாகவிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும்! கோபால் பாக்லே | India Is Safe Sri Lanka Will Be Safe China

 

எனவே இந்தியாவை இலங்கை பாதுகாத்தால், இலங்கை பாதுகாக்கப்படும் என்றும், இந்தியா பாதுகாக்கப்படும் போது இலங்கையும் பாதுகாக்கப்படும் என குறிப்பிட்டார்.

இந்தியா தற்போது ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளதாகவும் விரைவில் அது முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேறும் என்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

Tags: #Colombo#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsindiasrilanka
Previous Post

நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் தாழமுக்கம்: இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

Next Post

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டம்!

Next Post
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.