Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆய்வு கட்டுரைகள்

இந்தியாவிற்கு அடுத்த பேரிடி..! சீனாவின் கைவசமானது முக்கிய தளம்

October 3, 2023
in ஆய்வு கட்டுரைகள், உலகம், முக்கியச் செய்திகள்
இந்தியாவிற்கு அடுத்த பேரிடி..! சீனாவின் கைவசமானது முக்கிய தளம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

மாலைதீவில் கடந்தவார இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பூகோள அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாலைதீவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவு கொண்ட முகமது முய்சு வெற்றி பெற்றுள்ளமை இந்தியாவுக்கு பாதகமாக வந்துள்ளது.

மாலைதீவு அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றிபெற்றமை நிச்சயமாகவே சீனாவை மகிழ்சிப்படுத்தியிருக்கும்.

ஏனெனில் இந்தியாவை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் என்ற பரப்புரைகளை முன்வைத்த முகமது முய்சு 54 சதவிகித வாக்குகளுடன் இந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் தோல்வியடைந்த இப்ராஹிம் முகமது சோலியின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான மாலைதீவின் உறவுகள் வலுப்பெற்ற நிலையில் இனி காட்சிகள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த இப்ராஹிம் முகமது சோலி தனது பதவிக்காலத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தியிருந்தார்.

அவரது ஆட்சிக்காலத்தில் மாலைதீவில் தனது இருப்பைத்தக்க வைத்த இந்தியா அதன் மூலம் இந்து சமுத்திரத்தில் தனது கண்காணிப்பையும் விரிவாக்கியிருந்தது. இதற்காக 75 இந்திய ராணுவ அதிகாரிகள் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தனது கடற்படையை வேகமாக விரிவுபடுத்தி வரும் சீனா, மாலைதீவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் ஆதரவாளரான முகமது முய்சு வெற்றிபெற்றுள்ளார்.

பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தை போலவே மாலைதீவிலும் தனது கடற்படையை நிறுத்த சீனா முயல்கிறது. இந்த முயற்சியில் அதற்கு வெற்றி கிட்டினால் இந்தியப் பெருங்கடலில் அதற்கு இரண்டாவது தளம் கிட்டிவிடும் என்பதில் ஐயம் இல்லை.

இலங்கையை போல சீனாவிடம் இருந்து மாலைதீவு பெருமளவு கடனை பெற்றுள்ளது. தலைநகர் மாலேயை சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் பாலம் சீன முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் தெற்காசியாவில் சீனாவில் ஆதிக்கம் தீவிரமாக அதிகரித்து வருவது இந்தியாவிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என பூகோள அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: #China#Maldives#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsindia
Previous Post

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு பாரிய நஷ்டம்!

Next Post

ஒன்றாரியோ மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்!

Next Post
ஒன்றாரியோ மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்!

ஒன்றாரியோ மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.