Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஏனையவை

அரச நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வெளியானது சுற்றறிக்கை!!

June 17, 2022
in ஏனையவை
இலங்கையில் உச்சம் பெற்றுள்ள எரிபொருள் நெருக்கடி! – அரச அலுவலகங்களுக்குப் பூட்டு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இன்று முதல் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு பிரதி வௌ்ளிக்கிழமைகளில் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கும் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரால், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடியால் போக்குவரத்தை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக வெள்ளிக்கிழமைகளில் வீடுகளில் இருந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அரச ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களால் வௌ்ளிக்கிழமைகளில் திறக்கப்பட
வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களுக்கு இந்தச் சுற்றறிக்கை பொருந்தாது.

அலுவலகங்கள் மூடப்படும் காலப்பகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலைக்கு அழைக்க வேண்டும் என்று பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

அத்தோடு, வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படும் அலுவலகங்களில் உள்ள ஊழியர்களை அன்றோ அல்லது அதற்கு அடுத்த சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளிலோ கூடுதல் நேரம் அல்லது விடுமுறை ஊதிய அடிப்படையில் பணிக்கு அமர்த்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழமையின் ஐந்து வேலை நாள்களில் வௌ்ளிக்கிழமை அல்லாத வேறு ஒரு அரச விடுமுறை வருமிடத்து அந்த வாரத்தின் வௌ்ளிக்கிழமைமையை சாதாரண வேலை நாளாகக் கருதி அலுவலகங்கள் திறக்கப்பட வேண்டும்.

இந்த புதிய சுற்றறிக்கையின் மூலம் அரச நிறுவனங்களில் ஊழியர்களை குறைப்பது தொடர்பாக மே மாதம் 5 ஆம் திகதி வௌியிடப்பட்ட சுற்றறிக்கை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், குறைவான ஊழியர்களை அழைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை கிழமை நாள்களில் சாதாரணமாக முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள், தொழிலாளர் தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளர் ஆகியோருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இலங்கைசுற்றறிக்கைவிடுமுறைவெள்ளிக்கிழமை
Previous Post

பொருளாதாரத்தை மீட்க்கும் திட்டத்தை தயாரிக்கவுள்ள ரணில்!

Next Post

மகனின் விடுதலையை காணாது இறந்த தாய்!!

Next Post
மகனின் விடுதலையை காணாது இறந்த தாய்!!

மகனின் விடுதலையை காணாது இறந்த தாய்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.