Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வுக்கான சுற்றறிக்கை வெளியானது

September 15, 2022
in இலங்கை
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வுக்கான சுற்றறிக்கை வெளியானது
0
SHARES
Share on FacebookShare on Twitter

அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 60 ஆகக் குறைக்கப்பட்டுப் பொது நிர்வாக அமைச்சால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதற்கு நிதியமைச்சரால் 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதற்காக கடந்த ஒகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பாதீட்டில் முன்மொழியப்பட்டிருந்தது.

அதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில், ஓய்வூதிய பிரமாணக் குறிப்பில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி வெளியிப்பட்ட பொது நிர்வாகச் சுற்றறிக்கை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னர் இரத்துச் செய்யப்படவுள்ளது.

கட்டாய ஓய்வு வயதானது, அரசமைப்பின் மூலம், நீதித்துறை சட்டத்தின் மூலம் அல்லது நிர்ணயிக்கப்பட்டுள்ள நீதிச் சேவை உத்தியோகத்தர்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் பொருந்தும்.

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் அனைத்து அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக கருதிச் செயற்படுதல், 60 வயதுக்கு மேல் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள மற்றும் டிசெம்பர் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் 60 வயது பூர்த்தியாகும் அரச உத்தியோகத்தர்கள் அவர்களின் விருப்பத்தின்படி அந்தத் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற முடியும்.

அவ்வாறு ஓய்வுபெறவுள்ள அனைத்து உத்தியோகத்தர்களும், உரிய நடைமுறைப்படி, தங்களது ஓய்வுபெறும் விண்ணப்பங்களை, உரிய நியமன அதிகாரியிடம் அனுமதி பெற்று, அதை ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 60 வயதுஅரச ஊழியர்கள்இலங்கைகட்டாய ஓய்வுசுற்றறிக்கை
Previous Post

சிறிலங்கா தொடர்பாக இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் தூதுவர்கள் ஜூலி சங்குடன் பேச்சு!

Next Post

தண்டனையில் இருந்து விலக்களிப்பதே சிறிலங்காவின் கொள்கை – ஜெனிவாவில் குற்றச்சாட்டு

Next Post
தண்டனையில்  இருந்து விலக்களிப்பதே சிறிலங்காவின் கொள்கை – ஜெனிவாவில் குற்றச்சாட்டு

தண்டனையில் இருந்து விலக்களிப்பதே சிறிலங்காவின் கொள்கை - ஜெனிவாவில் குற்றச்சாட்டு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.