Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அரசியல் யாப்பினூடாக தீர்வு பெறுவதே பிரதான குறிக்கோள்: இரா. சம்பந்தன் அறிக்கை.

October 3, 2021
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொரோனா தொற்று காரணமாக தனியாகவும் குழுவாகவும் கலந்துரையாட
முடியாமற்போனமையால், சில விடயங்களில் தௌிவற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்
தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன்
இன்று மாலை வௌியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை, அரசியல் யாப்பினூடாக பெறுவதே
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான குறிக்கோள் என இரா.சம்பந்தன்
வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கமும் தலைவர்களும் உள்நாட்டிலும் சர்வதேசத்திற்கும் வழங்கிய
வாக்குறுதிகளின் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட விடயங்கள்
தொடர்பான தமது நிலைப்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தௌிவாகவும்
உறுதியாகவும் உள்ளதாக அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதற்கு சில சக்திகள்
முயற்சிப்பதாகவும் ஒற்றுமையை உறுதி செய்யும் முகமாக
சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முழுமையான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி, அரசியல் யாப்பினை உருவாக்க
நாடு முயற்சிக்கும் தருணத்தில், ஒற்றுமையை பேணுவது அடிப்படையானது எனவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் தௌிவு இருக்க வேண்டுமே தவிர, அவர்களை குழப்பக்கூடாது
எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஒன்றுபட்ட, பிளவுபடாத நாட்டிற்குள் சமத்துவம், நீதி மற்றும் சுய கௌரவம்
என்பனவற்றின் அடிப்படையில் தீர்வினை எட்டும் குறிக்கோளில் உறுதியாக
பயணிப்பதற்கு தௌிவின்மைகளையும் குழப்பங்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம்
சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous Post

காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை ஒப்படைக்க கோரி சிறுவர் தினத்தில் ஆர்ப்பாட்டம்.

Next Post

அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை குழப்ப வேண்டாம் – ஸ்ரீ விமல தேரர் .

Next Post

அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை குழப்ப வேண்டாம் – ஸ்ரீ விமல தேரர் .

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.