Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அரசாங்கத்தின் தீர்மானம் முட்டாள்தனமான செயல்!- டி.யு.குணசேகர தெரிவிப்பு!

September 30, 2022
in இலங்கை
அரசாங்கத்தின் தீர்மானம் முட்டாள்தனமான செயல்!- டி.யு.குணசேகர தெரிவிப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது. பெற்றுக்கொண்ட அரசமுறை கடன்களை மீள செலுத்த முடியாது என அரசாங்கம் சர்வதேசத்துக்கு அறிவித்தமை முட்டாள்தனமானதொரு தீர்மானமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்பதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்காமல் இருப்பது மிக பெரிய துரோகமாகும்.

இவ்வாறு இலங்கை கம்யூனிச கட்சியின் உப தலைவர் டி.யு.குணசேகர தெரிவித்தார்.

இலங்கை கம்யூனிச கட்சி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என குறிப்பிடுவதை மறுக்க முடியாது.

தவறான பொருளாதார முகாமைத்துவம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என விமல் வீரவன்ச,உதய கம்மன்பில ஆகியோர் எடுத்துரைத்த போது இவர்கள் அமைச்சரவையில் இருந்தால் நான் அமைச்சரவைக்கு வரமாட்டேன் என முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச சிறுபிள்ளை போல் அடம்பிடித்ததை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சு பதவியில் இருந்து விலக்கினார்.

பொருளாதார நெருக்கடி இறுதியில் அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்து எவரும் எதிர்பாராத வகையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களால் புறக்கணிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆட்சியதிகாரத்தை பெற்றுக்கொடுத்தது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் இதுவரை பொருத்தமான நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.

விவசாயத்துறை வீழ்ச்சியடைந்தால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தது,விவசாயத்துறையை மேம்படுத்த அரசாங்கம் எவ்வித திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. மாறாக பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இறக்குமதி துறைமை மாத்திரம் அரசாங்கம் நம்பியிருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: அரசாங்கம்இலங்கை கம்யூனிச கட்சிடி.யு.குணசேகரவிவசாயத்துறை வீழ்ச்சி
Previous Post

முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய வரி!!

Next Post

ஆடைகள் ஏற்றுமதியில் வீழ்ச்சி!!

Next Post
ஆடைகள் ஏற்றுமதியில் வீழ்ச்சி!!

ஆடைகள் ஏற்றுமதியில் வீழ்ச்சி!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.