Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

அமெரிக்காவில் மனைவி, மகளை கொடூரமாக கொன்ற இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்!

January 4, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
அமெரிக்காவில் மனைவி, மகளை கொடூரமாக கொன்ற இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பணக்காரரான ராஜேஷ் கமல் என்பவர் தனது மனைவி மற்றும் மகளை சுட்டுகொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் மாசசூசெட்ஸ் மாகாணம் டொவர் பகுதியை சேர்ந்த 57 வயதான ராகேஷ் கமல், 54 வயதான மனைவி டீனா கமல் 18 வயதான அரினா கமல் என்ற மகளே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகேஷ் கமல் அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ராகேஷ் கமல், குடும்பத்துடன் டொவர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.

இதனிடையே, கடந்த 28ம் திகதி பண்ணை வீட்டில் ராகேஷ் கமல், அவரது மனைவி டீனா கமல், மகள் அரினா கமல் ஆகிய 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மூன்று பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 3 பேரும் கொலை செய்யப்பட்டனரா? தற்கொலை செய்துகொண்டனரா? என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், மனைவி, மகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு ராகேஷ் கமல் தற்கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த ராகேஷ் அருகே கைத்துப்பாக்கி கிடந்துள்ளது. அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த பொலிஸார் தடயவியல் சோதனை மேற்கொண்டனர். மேலும், 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

அதில் ராகேஷ் கமல், மனைவி டீனா கமல், மகள் அரினாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது உறுதியாகியுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கி ராகேஷ் கமலுக்கு சொந்தமானது அல்ல என்பதும், துப்பாக்கி வைத்துக்கொள்ள ராகேஷுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மனைவி, மகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு இந்தியவம்சாவளி பணக்காரர் ராகேஷ் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: #Indian#Murder#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

வரி நடைமுறையைப் பின்பற்றாதவர்களுக்கு அறவிடப்படும் தண்டப்பணம்

Next Post

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: வெளியானது 2024இன் தரவரிசை

Next Post
உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: வெளியானது 2024இன் தரவரிசை

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: வெளியானது 2024இன் தரவரிசை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.