Tuesday, June 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஏனையவை

அன்னைத் தமிழுக்காக உயிர் பிரிந்த தமிழறிஞர் கலாநிதி வண. சிங்கராயர் தாவீது அவர்களின் நினைவுதினம்…

June 3, 2024
in ஏனையவை
அன்னைத் தமிழுக்காக உயிர் பிரிந்த தமிழறிஞர் கலாநிதி வண. சிங்கராயர் தாவீது அவர்களின் நினைவுதினம்…
0
SHARES
Share on FacebookShare on Twitter

“தமிழ் எங்கள் உயிருக்கு மேல்” என நாம் சொல்லி இருப்போம். இல்லையேல் யாரேனும் சொல்லிக் கேட்டு இருப்போம்..

ஆனால் …

அப்படி தன் உயிருக்கு மேலாக போற்றிய அன்னைத் தமிழுக்கு ஒரு சோதனை வந்த பொழுது தன் உயிர் சுமக்க முடியாமல் தன்னையும் அறியாமல் உயிர் பிரிந்த தமிழறிஞர் கலாநிதி தாவீது அடிகள் என அழைக்கப்படும் வண. சிங்கராயர் தாவீது அவர்களிற்கு நினைவு வணக்கம்.

டேவிட் அடிகள் என்ற பெயரைத் தமிழில் தாவீது என மாற்றிக்கொண்ட இவர் யூன் 28, 1907 ம் ஆண்டு பிறந்தார்.

யூன்1 அதிகாலை யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சோகம் தாளாமல் அன்று இரவு படுக்கைக்குச் சென்றவர்
யூன் 2, 1981 அன்று மீண்டும் எழும்பாமல் மண்ணை விட்டு மறைந்தார்.

தாவீது அடிகள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர். சொற்பிறப்பியல் ஆய்வாளர். பன்மொழி வித்தகர். தமிழ் மீது பெரும் காதல் கொண்டவர்.

யாழ்ப்பாணம் தும்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட தாவீது அடிகள் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆரம்ப, மற்றும் இடைநிலைக் கல்வியைக் கற்று பின்னர் லண்டன் மெட்ரிக்குலேஷன் சோதனையில் சித்தி அடைந்து அதன் பின் இலண்டன் பல்கலைக்கழக இளங்கலைமாணிப் பரீட்சையில் தோற்றி சிறப்புத் தரத்தில் சித்தியடைந்தார்.

தன் தந்தையார் படிப்பித்த யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிலேயே 1936 தொடக்கம் 1967 வரை ஆசிரியராகப் பணியாற்றினார்.

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் உந்துதலால் சமஸ்கிருத மொழியைக் கற்று புலமை அடைந்து அதில் முதுகலைமாணிப் பட்டத்தினை இலண்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கீழைத்தேசத்தில் முக்கியமாக வாழும் மொழிகளையும் மேலைத்தேசத்தில் முக்கிய வாழும் மொழிகளையும் கற்கத் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் மொழியை மையமாக வைத்து மற்றைய மொழிகளோடு ஒப்பீடு ஆய்வு செய்து, சுவாமி ஞானப்பிரகாசர் ஆரம்பித்து வைத்த ஒப்பீட்டுச் சொற்பிறப்பியல் அகராதிகளைப் பின்பற்றி தானும் ஒப்பீட்டுச் சொற்பிறப்பியல் அகராதிகளை 1970 ஆம் ஆண்டு தொடக்கம் பல பாகங்களாக வெளியிட்டுள்ளார்.

அவற்றை விடத் தனி நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள் ஒன்று “We stand for…’ என்பதாகும்.

ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் தன் வாழ்க்கையில் இறுதிக் காலத்தில் தான் கற்பித்த பத்திரியார் கல்லூரியிலேயே மேல்மாடியில் ஓர் அறையில் தங்கி இருந்தார்.

நூலகம் எரியூட்டப்பட்ட செய்தியைக் கேட்ட அதிர்ச்சியினாலேயே அடிகளார் உயிர் நீத்தார் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ் நூலகம் எரிப்பு என்பது அழியாத நெருப்பு!

இந்த தீ நினைவுகளைச் சந்ததி கடந்தும் தமிழினம் ஏந்தி நிற்கும்.

அந்த வலிகளை நினைக்கும் ஒவ்வொரு ஆண்டிலும் யாழ் நூலக எரியூட்டலின் வேதனை தாங்காமல் உயிர் நீத்த தாவீது அடிகளின் நினைவுகளும் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

Previous Post

இலங்கையில் பல பகுதிகளில் மின் விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை!

Next Post

இந்தியாவுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும் கனடாவின் கன்சர்வேடிவ் தலைவர்

Next Post
இந்தியாவுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும் கனடாவின் கன்சர்வேடிவ் தலைவர்

இந்தியாவுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும் கனடாவின் கன்சர்வேடிவ் தலைவர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.