பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில காரணங்களால் சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க மூன்று மாதங்களுக்கு ஜப்பானுக்கு சென்றுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சாவும் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்.
ரொஷான் ரணசிங்கவுக்கு மூன்று மாத விடுமுறையை நாடாளுமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது. அமைச்சின் செயற்பாடுகளால் விரக்தியடைந்துள்ள நிமல் லன்சா, சில காலங்களாகவே மன அமைதியை எதிர்பார்த்து வெளிநாடு சென்றுளார் என்று கூறப்படுகின்றது.
இதேவேளை, அமைச்சுப் பதவி கிடைக்காததால் விரக்தியடைந்துள்ள அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசியல் நடவடிக்கைகளை விட்டு விலகி வெளிநாடு செல்லவுள்ளது என்று கூறப்படுகின்றது.
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவும் அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகியதோடு அண்மையில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக பதவியேற்க சென்றுள்ளார்.
Discussion about this post