Thamilaaram News

28 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

வியட்நாம் அருகே இலங்கையர்களுடன் தத்தளித்த கப்பல் – நடந்தது என்ன?

November 8, 2022
in இலங்கை
வியட்நாம் அருகே இலங்கையர்களுடன் தத்தளித்த கப்பல் – நடந்தது என்ன?
0
SHARES
Share on FacebookShare on Twitter

வியட்நாம் அருகே ஆழ் கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் கப்பல் தொடர்பான மேலதிக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிய கப்பலில் மிக நெருக்கமாக அடைத்து ஏற்றப்பட்டிருந்த அகதிகள் அனைவரும் மியான்மரில் இருந்து கனடா நோக்கிய ஆபத்தான நீண்ட கடற்பயணத்தை-பெரும் நிதிச் செலவில் மேற்கொள்ளவிருந்தனர் என்று கூறப்படுகிறது.

தென் சீனக் கடல் வழியாகப் பசுபிக் கடலைக் கடக்கின்ற – மிகச் சவாலான – தற்கொலைக்குச் சமனான – துணிகரப் பயணம் அது என்று வியட்நாமின் செய்தி ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

“லேடி ஆர் 3” என்னும் அந்த மீன்பிடிக் கப்பலில் கதறிக் கொண்டிருந்த இலங்கையர்கள் 303 பேரையும் தாங்கள் பொறுப்பேற்றுள்ளோம் என்று வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அவர்களில் 19 பெண்கள், 20 குழந்தைகளும் அடங்குவர்.

மியன்மார் நாட்டுக் கொடியுடன் காணப்பட்ட அந்தக் கப்பல் கடும் காற்றும் கொந்தளிப்புமான கால நிலைக்கு மத்தியில் கப்பலின் இயந்திர அறைக்குள் நீர் புகுந்ததால் அது மூழ்கும் ஆபத்து நிலைக்குச் சென்றுகொண்டிருந்தது. அதனால் அதிலிருந்தோர் அவலக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

கப்பல் மூழ்குவது பற்றிய முதலாவது தகவல் இலங்கைக் கடற்படையிட மிருந்து வியட்நாம் கரையோரக் காவல் மற்றும் மீட்புப் படையினருக்கு திங்கட்கிழமை காலை கிடைத்தது.

சிங்கப்பூரில் இருந்து அதேகடல் வழியாகச் சென்றுகொண்டிருந்த ஜப்பான் நாட்டின்’ஹெலியோஸ் லீடர்’ என்ற சரக்குக் கப்பல் உடனடியாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பலை நோக்கித் திருப்பப்பட்டது.

40 நிமிட நேரத்தில் அகதிகள் கப்பலை நெருங்கிய ஜப்பானியக் கப்பல் அதிலிருந்த 303 பேரையும் மீட்டது. இந்த மீட்பு முயற்சிக்கு வியட்நாமின் கடற்படைப் படகுகள் உதவின.

பலர் நோய்வாய்ப்பட்டும் நெரிசலில் காயமடைந்தும் காணப்பட்ட பல அகதிகளுக்குக் கப்பலில் வைத்து முதலுதவி அளிக்கப்பட்டது. அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வுங் தோ மாகாண அதிகாரிகளிடம் கைகயிக்கப்படுவர் என்ற தகவலை வியட்நாமின் செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கப்பல் மாலுமிகள் மற்றும் பயண ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகே இந்த ஆபத்தான கடற்பயணம் தொடர்பான பின்னணித் தகவல்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Tags: அகதிகள்இலங்கையர்கப்பல்தென்சீனக் கடல்மியன்மார்மூழ்குதல்வியட்நாம்
Previous Post

போதைக்கு அடிமையான தந்தையால் சிறுமி சித்திரவதை! – பதற வைக்கும் வீடியோ பதிவு!

Next Post

பருத்தித்துறையில் 9 மாதக் குழந்தை மர்ம மரணம்! – விசாரணைகள் தீவிரம்!

Next Post
பருத்தித்துறையில் 9 மாதக் குழந்தை மர்ம மரணம்! – விசாரணைகள் தீவிரம்!

பருத்தித்துறையில் 9 மாதக் குழந்தை மர்ம மரணம்! - விசாரணைகள் தீவிரம்!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

25 வயதான இளம் பெண் மர்மமான முறையில் படுகொலை!

25 வயதான இளம் பெண் மர்மமான முறையில் படுகொலை!

March 28, 2023
ஏதிலிகளாக பதிவு செய்யப்படாத ஈழத்தமிழர்கள்!

ஏதிலிகளாக பதிவு செய்யப்படாத ஈழத்தமிழர்கள்!

March 28, 2023
கேக் கொள்வனவு செய்வதைத் தவிருங்கள்- மக்களுக்கு அறிவுறுத்து

கேக் கொள்வனவு செய்வதைத் தவிருங்கள்- மக்களுக்கு அறிவுறுத்து

March 28, 2023
செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட பயன்படும் உருளைக்கிழங்கு!

செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட பயன்படும் உருளைக்கிழங்கு!

March 28, 2023

Recent News

25 வயதான இளம் பெண் மர்மமான முறையில் படுகொலை!

25 வயதான இளம் பெண் மர்மமான முறையில் படுகொலை!

March 28, 2023
ஏதிலிகளாக பதிவு செய்யப்படாத ஈழத்தமிழர்கள்!

ஏதிலிகளாக பதிவு செய்யப்படாத ஈழத்தமிழர்கள்!

March 28, 2023
கேக் கொள்வனவு செய்வதைத் தவிருங்கள்- மக்களுக்கு அறிவுறுத்து

கேக் கொள்வனவு செய்வதைத் தவிருங்கள்- மக்களுக்கு அறிவுறுத்து

March 28, 2023
செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட பயன்படும் உருளைக்கிழங்கு!

செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட பயன்படும் உருளைக்கிழங்கு!

March 28, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.