Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வட மாகாண மக்களுக்கான நிர்மாண, பராமரிப்பு திட்டம்!- ஆளுநர் அலுவலகம் நடைமுறை!

November 6, 2022
in இலங்கை
வட மாகாண மக்களுக்கான நிர்மாண, பராமரிப்பு திட்டம்!- ஆளுநர் அலுவலகம் நடைமுறை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாண மக்களுக்கும் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் நிர்மாண மற்றும் பராமரிப்பு உதவிகளை வழங்குவதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊடாகவோ அல்லது முதலீட்டு சபை ஊடாகவோ வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு கையளிக்கப்படும் காணிகளில் வெளிநாட்டு பயனாளிகள் வீடு கட்டுவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் நிர்மாணம் மீள்நிர்மாணம் அல்லது கட்டட பராமரிப்பு சேவைகளை எதிர்பார்க்கும் வடக்கு மாகாண உத்தியோகத்தர்களும் மற்றும் வடக்கு மாகாண தனியார் நில உரிமையாளர்களும் இந்தத் திட்டத்தால் பயனடையலாம்.

வடக்கு மாகாணத்தில் நில உரிமைகளை கொண்ட நிர்மாணம் மீள்நிர்மாணம் அல்லது கட்டட பராமரிப்பு சேவைகளை எதிர்பார்க்கும் வெளிநாட்டில் வதிவோரும் இந்தத் திட்டத்தால் பயனடையலாம்.

கோரிக்கைகளை பெற்று அதனுடன் தொடர்புடைய விடயங்களை ஆராய்ந்து வாடிக்கையாளருடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் செயன்முறை 30 நாள்களுக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுமானங்கள் நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் விவரக் குறிப்புகளுக்கு அமைவாக இருப்பதோடு பசுமையானதும், சுற்றுச் சூழலுக்கு ஏற்புடையதும் கலாச்சார விழுமியங்களை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும்.

அத்துடன் செலவு குறைந்த அணுகுமுறைகளை உள்ளடக்கி இருப்பதனை உறுதி செய்ய வேண்டும் என்பதே அடிப்படைக் கொள்கை ஆகும்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக மாகாண கட்டடங்கள் திணைக்களம் செயற்படுவதோடு திட்டத்தைக் கண்காணிக்கும் நிறுவனமாக ஆளுநர் செயலகம் செயற்படும்.

கண்காணிப்பு குழுவில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் அல்லது ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி, பிரதிப் பிரதம செயலாளர் பொறியியல் சேவைகள், உள்ளூராட்சி ஆணையாளர், காணி ஆணையாளர் மற்றும் பணிப்பாளர் கட்டடங்கள் திணைக்களம் ஆகியோர் உள்ளடங்குவார்கள்.

ஆர்வமுள்ளவர்கள் தேவையான மேலதிக விபரங்களினை மாகாணப் பணிப்பாளார் அலுவலகம், மாகாண கட்டடங்கள் திணைக்களம், கடற்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம் என்ற முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும் என்றுள்ளது.

Tags: அரசாங்க உத்தியோகத்தர்பராமரிப்பு திட்டம்வடக்கு மாகாணம்ஜீவன் தியாகராஜா
Previous Post

வாராந்தம் 10 லீற்றர் எரிபொருள்!- இதுவரை 7, 675 ஓட்டோக்கள் பதிவு!

Next Post

மீண்டும் அதிகரிக்கின்றது லிட்ரோ எரிவாயு விலை!

Next Post
மீண்டும் அதிகரிக்கின்றது லிட்ரோ எரிவாயு விலை!

மீண்டும் அதிகரிக்கின்றது லிட்ரோ எரிவாயு விலை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.