Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

வடக்கில் மரபுரிமை மீளுருவாக்கப் பணிகள் ஆரம்பம் – வலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் . மு.தமிழ்ச்செசல்வன்

November 6, 2021
in முக்கியச் செய்திகள், வரலாறு
0
SHARES
Share on FacebookShare on Twitter

வடக்கில் தமிழர்களின் மரபுரிமை சின்னங்ங்கள், எச்சங்கள் என்பன
மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என யாழ் பல்கலைகழக
தொல்லியல் துறை சிரேஸ்ட பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (04) கிளிநொச்சிக்கு விஜயம் செய்த தேசிய மரபுரிமைகள்,
அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்
விதுர விக்ரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தொல்லியல்
திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர்அனுர மனதுங்க,  அமைச்சின்
செயலாளர் நிசாந்தி ஜெயசிங்க மேலதிகப் பணிப்பாளர் நிமால் கிளிநொச்சி
மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் ஆகியோர்  பூநகரி
கௌதாரிமுனையில் உள்ள சோழர் கால சிவாலாயமான மண்ணித்தலை சிவன் ஆலயம்  யாழ்
பிராந்திய தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளரால்  மணிமாறன், திருமதி
நித்தியா ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்ளின் தலைமையிலும்,
கெளாதாரிமுனை பிள்ளையார் ஆலயம்  மேற்பார்வை செய்வதற்கு கையிலைவாசன்
மற்றும் கோகிலவாசன்  ஆகியோர் நியமிக்கப்பட்டு  பழைய வடிவில்
மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எனத் தெரிவித்த
புஸ்பரட்ணம் அவர்கள்

இதற்காக இந்த வருடத்திற்கு முதல் கட்ட நிதியாக ஒவ்வொரு ஆலயத்திற்கும் தலா
15 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்குறித்த இரண்டு மரபுரிமை
சின்னங்களும் பழைய வடிவில் அனைத்து அம்சங்களுடன் மீளுருவாக்கம்
செய்யப்படவுள்ளது. அடுத்தடுத்த வருடங்களில் தேவையான மேலதிக நிதியும்
ஒதுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளதாக பேராசிரியர் புஸ்பரட்ணம்
தெரிவித்துள்ளார்.

 இந்த இரண்டு சின்னங்களும் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கை தொல்லியல்
திணைக்களத்தினரால்  பாதுகாக்கப்பட வேண்டிய மரபுரிமைச் சின்னங்கள் என
அடையாளப்படுத்தியது. இதன் பின்னர் இந்து சமய திணைக்களம் கொட்டகை அமைத்து
எஞ்சிய பகுதிகள்  அழிந்து போகாமல பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இலங்கை சுந்திரம் அடைந்த காலம் முதல் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள்
அழிவடைந்தும், விற்பனை பொருளாகவும் மாறியிருந்த நிலையில் இந்த முயற்சி
மகிழ்ச்சியளிக்கிறது. 1990 ஆம் ஆண்டு முதல் இவ்விரு ஆலயங்களும்
அனைவருக்கும் பரிச்சியமாக இருந்து வந்துள்ளன.  இதுவொரு நல்ல முயற்சி இந்த
முயற்சியில்  தொல்லியல் பட்டத்தாரிகள் 16 பேர் ஈடுப்படவுள்ளனர். என்பதும்
குறிப்பிடத்தக்கது.

Previous Post

Payday Loans Hamilton Square New Jersey

Next Post

வட்டக்கச்சியில் இலங்கை வங்கியின் முகவர் வங்கியியல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மு.தமிழ்ச்செல்வன்

Next Post

வட்டக்கச்சியில் இலங்கை வங்கியின் முகவர் வங்கியியல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மு.தமிழ்ச்செல்வன்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.