Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கிளிநொச்சியில் இரண்டாவது தடுப்பூசி செலுத்த சென்ற முதியவர்கள் திரு்பபி அனுப்பட்டனர் .

August 5, 2021
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு இன்றைய தினம் இரண்டாவது தடுப்பூசி
செலுத்துவதற்கு சென்ற 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்
நுற்றுக்கணக்கானவர்கள் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

யூலை மாதம் 06 திகதியும் அதனை அண்டிய சில நாட்களும்  கிளிநொச்சி
மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது சினோபாம்
தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் போது இரண்டாவது  தடுப்பூசி இன்றைய
தினத்திற்கு திகதி குறிப்பிட்டது.

எனவே 60 வயதுக்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட
முதியவர்கள்  தடுப்பூசி அட்டையில் குறிப்பிட்ட இன்றை தினம் தங்களுக்கான
இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு
காலை ஆறு முதல் சென்றுள்ளனர். சுமார் ஒன்பது மணி வரை இவ்வாறு
நூற்றுக்கணக்கான முதியவர்கள் மத்திய கல்லூரி மண்டபத்தில் ஒன்று சேர்ந்த
போது தடுப்பூசி செலுத்துவதற்கான எவ்வித ஏற்பாடுகளும் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் சம்பவ தொடர்பில் அறிந்த இராணுவத்தினர் சம்பவ
இடத்திற்குச்சென்று 60 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு இரண்டாவது
தடுப்பூசி வரும் ஏழாம் திகதி பின்னர் கிடைக்க கூடிய வாய்ப்புக்கள்
உள்ளதாகவும் எனவே இது தொடர்பான அறிவித்தல் சுகாதார துறையினரால்
அறிவிக்கப்படும் என்றும் அதன் பின்னர் சமூகம் தருமாறும் தெரிவித்து பொது
மக்களை திருப்பி அனுப்பினர்.

இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பிரிவு அதிகாரிகளுடன்
தொடர்பு கொண்டு வினவிய போது இச்சம்பவம் தொடர்பில் தங்களுக்கு எதுவும்
தெரியாது என்றும் முதலாவது தடுப்பூசியினை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
இராணுவத்தினரே  செலுத்தினார்கள் எனவே  அவர்களே இவர்களுக்கான பதிலளிக்க
வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தால் வயோதிப நிலையிலும் தூர இடங்களிலிருந்து வருகை தந்த மக்கள்
கடும் சிரமங்களுக்கு மத்தியில் திரும்பிச் சென்றனர் தங்களுக்கு முறையான
அறிவித்தல்களை வழங்கியிருந்தால்  கொரோனா பரவல் நெருக்கடி மத்தியிலும்
வீண் அலைச்சல் இருந்திருக்காது எனத் தெரிவித்தனர்.

செய்தி:திரு.மு. தமிழ்ச்செல்வன்

Previous Post

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தி முடிக்க மேலும் 15 ஆயிரம் ஊசிகள் தேவை – மாவட்ட அரச அதிபர்.

Next Post

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியமையை எரியும் நெருப்பில் வைக்கோலை போடும் செயல்: விசேட வைத்தியர் சங்கம் எச்சரிக்கை

Next Post

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியமையை எரியும் நெருப்பில் வைக்கோலை போடும் செயல்: விசேட வைத்தியர் சங்கம் எச்சரிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.