Thamilaaram News

28 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

யாழில் நடக்கும் காணி மாபியா! – சட்டத்தரணி, முன்னாள் அதிபர், வர்த்தகர் என நீளும் கைதுகள்!

November 11, 2022
in இலங்கை
யாழில் நடக்கும் காணி மாபியா! – சட்டத்தரணி, முன்னாள் அதிபர், வர்த்தகர் என நீளும் கைதுகள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில், அராலி வீதியில் போலி உறுதி தயாரிக்கப்பட்டு காணி விற்பனை செய்யப்பட்டமை தொடர்பாக சட்டத்தரணி ஒருவரும், பாடசாலை முன்னாள் அதிபர் ஒருவரும் பொலிஸ் சிறப்புக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொம்மைவெளியில் உள்ள காணி ஒன்றின் உரிமையாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் போலியான கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியால் காணி உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்புக் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சந்தேகநபர் புலன் விசாரணைகள் நடைபெற்று வருவதால் கடந்த ஒரு மாத காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது். அதில் தமது புலன்விசாரணை தொடர்பான தொடர் அறிக்கையை பொலிஸ் தரப்பு தாக்கல் செய்தது. வழக்கை ஆராய்ந்த மன்று மோசடியில் சம்பந்தப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்று மன்று கேள்வி எழுப்பியது.

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா புலன் விசாரணை தொடர்பில் பொலிஸ் தரப்புப்கு எதிராக் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் முன்வைத்தார்.

சந்தேக நபர் சார்பாக முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கட்டளை ஒன்றை வழங்கிய மேலதிக நீதிவான் வழக்கு நடவடிக்கைகளின் பதிவு யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், அதன் மீதான அவரின் அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை மன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக உறுதியை நிறைவேற்றி மோசடிக்கு உடந்தையாக இருந்த சட்டத்தரணி நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரான யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி கையூட்டு குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டு பதவியில் இடைநிறுத்தப்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவரும் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவானிடம் முற்படுத்தப்படவுள்ளனர். அதேநேரம் இந்த வழக்குடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உரிமையாளர்கள் இல்லாத காணிகள் இனங்காணப்பட்டு, அவற்றின் உறுதிகள் போலியாக நிறைவேற்றப்பட்டு அவற்றை விற்கும் மோசடி நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. போலி உறுதிகளை நம்பிக் காணிகளை வாங்குவோர் அந்தக் காணிகளில் எதுவும் செய்ய முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

Tags: காணி மாபியாகைதுகள்சட்டத்தரணிபோலி உறுதிமுன்னாள் பாடசாலை அதிபர்யாழ்ப்பாணம்
Previous Post

படகு மூலம் கனடா செல்ல முயன்றவர்கள் வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ! – இனி என்ன நடக்கும்?

Next Post

யாழில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் கைது! – ஒரு கோடி ரூபா பெறுமதியான நகைகள் மீட்பு!

Next Post
யாழில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் கைது! – ஒரு கோடி ரூபா பெறுமதியான நகைகள் மீட்பு!

யாழில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் கைது! - ஒரு கோடி ரூபா பெறுமதியான நகைகள் மீட்பு!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

25 வயதான இளம் பெண் மர்மமான முறையில் படுகொலை!

25 வயதான இளம் பெண் மர்மமான முறையில் படுகொலை!

March 28, 2023
ஏதிலிகளாக பதிவு செய்யப்படாத ஈழத்தமிழர்கள்!

ஏதிலிகளாக பதிவு செய்யப்படாத ஈழத்தமிழர்கள்!

March 28, 2023
கேக் கொள்வனவு செய்வதைத் தவிருங்கள்- மக்களுக்கு அறிவுறுத்து

கேக் கொள்வனவு செய்வதைத் தவிருங்கள்- மக்களுக்கு அறிவுறுத்து

March 28, 2023
செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட பயன்படும் உருளைக்கிழங்கு!

செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட பயன்படும் உருளைக்கிழங்கு!

March 28, 2023

Recent News

25 வயதான இளம் பெண் மர்மமான முறையில் படுகொலை!

25 வயதான இளம் பெண் மர்மமான முறையில் படுகொலை!

March 28, 2023
ஏதிலிகளாக பதிவு செய்யப்படாத ஈழத்தமிழர்கள்!

ஏதிலிகளாக பதிவு செய்யப்படாத ஈழத்தமிழர்கள்!

March 28, 2023
கேக் கொள்வனவு செய்வதைத் தவிருங்கள்- மக்களுக்கு அறிவுறுத்து

கேக் கொள்வனவு செய்வதைத் தவிருங்கள்- மக்களுக்கு அறிவுறுத்து

March 28, 2023
செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட பயன்படும் உருளைக்கிழங்கு!

செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட பயன்படும் உருளைக்கிழங்கு!

March 28, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.