Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மக்கள் சக்தியின் முன் மண்டியிட நேரும்!! – அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த சஜித்!

April 3, 2022
in இலங்கை
இலங்கை அரசுக்கு எதிராக நாளை கொழும்பில் திரளவுள்ள மக்கள்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மக்கள் எழுச்சியை ஒடுக்குவதற்கு அரசு, அரச பயங்கரவாதத்தை கையில் எடுத்துள்ளது. ஆனாலும் மக்கள் சக்தியின் முன்னால் நிச்சயம் மண்டியிடவேண்டிவரும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் ஆசியுடனேயே நாம் ஆட்சிக்கு வருவோம். ஆள் மாற்றம் ஊடாக அதனை செய்யமாட்டோம்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.

நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த நிலையிலும், அரசின் ஜனநாயக விரோதச்செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியால் சுதந்திர சதுக்கத்துக்கு முன்னால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் பாதுகாப்பு சட்டத்தை அரசு துஷ்பிரயோகம் செய்துள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகளையும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. போராடும் மற்றும் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளன.

மக்களின் நிலைப்பாட்டை – எதிர்ப்பை தடுப்பதற்காக அவசரகால நிலை மற்றும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதாவது மக்கள் எழுச்சியை தடுக்க அரச பயங்கரவாதம் கையாளப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டுக்கு இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்புடையவை அல்ல. என்னதான் செய்தாலும் மக்கள் சக்திக்கு முன்னால் மண்டியிட வேண்டிவரும் என்றார்.

அதேவேளை, ஊரடங்கு உத்தரவைமீறி நாட்டில் பல பகுதிகளில் நேற்று போராட்டங்கள் வெடித்தன.

Tags: அரச பயங்கரவாதம்இலங்கைஊரடங்குசஜித் பிரேமதாசமக்கள் எழுச்சி
Previous Post

அவசர காலச் சட்ட நீடிப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு!! – எதிர்த்து வாக்களிக்கவும் முடிவு!

Next Post

23 Celebrity Tweets You Missed From The Golden Globes

Next Post

23 Celebrity Tweets You Missed From The Golden Globes

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.