Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மக்கள் கருத்துக்கு செவிசாய்க்க வேண்டும் அரசாங்கம் – சந்திரிகா வலியுறுத்து

May 7, 2022
in இலங்கை
மக்கள் கருத்துக்கு செவிசாய்க்க வேண்டும் அரசாங்கம் – சந்திரிகா வலியுறுத்து
0
SHARES
Share on FacebookShare on Twitter

இடைக்கால அரசாங்கத்துக்கு இடமளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்துக்கு தயாராக இல்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆணை இருக்கும் வரை மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியில் இருக்க முடியும். மக்கள் நிராகரித்தால் அவர்கள் விரைவில் அதிகாரத்தை கைவிட தயாராக இருக்க வேண்டும்.

மக்கள் தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவே மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் வழங்குகிறார்கள். மக்கள் கொடுக்கும் அதிகாரம் வாழ்நாள் முழுவதும் அல்ல தற்காலிகமானது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

மகாசங்கத்தினர், சிவில் சமூகம் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்து மதத் தலைவர்களின் பலத்த அழுத்தங்களுக்கு செவிசாய்க்காமல் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இந்த நேரத்தில் அரசாங்கத்திற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன.
முதலாவது ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகி, இடைக்கால அரசாங்கத்தின் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டில் நிலையான நிர்வாகத்தை உருவாக்குவது.

இரண்டாவது, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமுன்ற உறுப்பினர்கள் அதற்கு தயாராக இல்லை என்றால் தேர்தல் மூலம் நிலையான அரசாங்கத்தை அமைப்பது.

இறுதியாக, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேர்மையாக மக்களுக்காக நிற்க வேண்டும். அவர்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்த முடியாவிட்டால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: அரசியல் நெருக்கடிஇடைக்கால அரசுஇலங்கையாழ்ப்பாணம்
Previous Post

ரணில் வீட்டைச் சுற்றிவளைத்த மக்கள்!! – அரசைப் பாதுகாக்கிறார் எனக் குற்றச்சாட்டு!

Next Post

இல்லாத ஊருக்கு வழி சொல்கின்றது அரசாங்கம்! – லக்ஸ்மன் கிரியெல்ல கடும் காட்டம்!

Next Post
இல்லாத ஊருக்கு வழி சொல்கின்றது அரசாங்கம்! – லக்ஸ்மன் கிரியெல்ல கடும் காட்டம்!

இல்லாத ஊருக்கு வழி சொல்கின்றது அரசாங்கம்! - லக்ஸ்மன் கிரியெல்ல கடும் காட்டம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.