Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பெரும் ஊழல்களை அம்பலப்படுத்திய அநுரகுமார!! – அதிர்கின்றது கொழும்பு அரசியல்!

May 3, 2022
in இலங்கை
பெரும் ஊழல்களை அம்பலப்படுத்திய அநுரகுமார!! – அதிர்கின்றது கொழும்பு அரசியல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளின் ஊழல், மோசடிகள் பலவற்றை அம்பலப்படுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவின் பெரும்பாலான சொத்துகள் திருக்குமரன் நடேசனின் பெயரில்தான் பதுக்கப்பட்டுள்ளன. மல்வானை காணி விவகாரத்தில்கூட பாரிய ஊழல்கள் உள்ளன என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

‘நாட்டை நாசமாக்கிய திருட்டுக் கும்பலை ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளின்கீழ் ‘ஊழல் எதிர்ப்புக் குரல்’ எனும் அமைப்பால் கொழும்பு மன்றத்தில் இன்று விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“எயா பஸ்களை வாங்குமாறு, பிரான்ஸின் எயா பஸ் நிறுவனம் அழுத்தம் பிரயோகித்துள்ளது. இது குறித்து சர்வதேச விசாரணை இடம்பெற்றது. இது தொடர்பில் பிரிட்டன் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த எயா பஸ்களை கொள்வனவு செய்வதற்கு முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் வீட்டில் கூட்டம் நடந்துள்ளது. சமல் ராஜபக்சவின் மகனும் இதனுடன் தொடர்புபட்டுள்ளார். எயா லங்கா நிறுவனத்தில் அவர் பதவி வகித்துள்ளார் என்று அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

2015 முதல் 2019 வரையான காலத்தில் தேசிய மத்திய கலாசார நிதியத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
நிதியம் மற்றும் நிதியத்தின் உறுப்பினர்களின் எந்த அனுமதியும் இன்றி நிதியத்தின் பணம் செலவிடப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸவின் நேரடியான உத்தரவின் கீழேயே இந்தச் செலவுகளைச் செய்யப்பட்டுள்ளன என்று சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

செலவு செய்து முடிந்த பின்னர் 2019.11.15ஆம் திகதி, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவசர பணிப்பாளர் குழு நியமிக்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க, ஜோன் அமரதுங்க, மங்கள சமரவீர, சஜித் பிரேமதாஸ, அகில விராஜ் , மனோ கணேசன், பேர்னாட் பிரியந்த ஆகியோர் பணிப்பாளர்கள் குழுவில் இருந்தனர்” என்ற தகவலையும் அநுரகுமார வெளியிட்டார்.

யோசித ராஜபக்சவின் காணிகள் குறித்த தகவல்களும் இதன்போது அம்பலப்படுத்தப்பட்டன. அத்துடன் முன்னாள் அமைச்சர் அமரர். ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான தகவல்களும் தம்மிடம் இருக்கின்றன என்றும் அநுரகுமார தெரிவித்தார்.

Tags: அநுரகுமாரஇலங்கைகொழும்பு அரசியல்பஸில் ராஜபக்சபெரும் ஊழல்மோசடிகள்
Previous Post

நாளை மஹிந்த வெளியிடவுள்ள அறிவித்தல்! – அழுத்தங்களால் எடுக்கப்பட்டுள்ள முடிவு!

Next Post

மொட்டு ஆட்சியைக் கவிழ்க்க சஜித் இரு முனை தாக்குதல் – நாளை பதவி துறக்கிறார் மஹிந்த!!

Next Post
மொட்டு ஆட்சியைக் கவிழ்க்க சஜித் இரு முனை தாக்குதல் – நாளை பதவி துறக்கிறார் மஹிந்த!!

மொட்டு ஆட்சியைக் கவிழ்க்க சஜித் இரு முனை தாக்குதல் - நாளை பதவி துறக்கிறார் மஹிந்த!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.