Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

‘புலிகளையும் நினைவுகூர வேண்டும்’ – அதிஉயர் சபையில் சிங்கள எம்.பி. கோரிக்கை!!

May 20, 2022
in இலங்கை
‘புலிகளையும் நினைவுகூர வேண்டும்’ – அதிஉயர் சபையில் சிங்கள எம்.பி. கோரிக்கை!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

போரில் உயிரிழந்த படையினரை நினைவுகூரும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து உயிரிழந்த இளைஞர்களையும் நினைவுகூர வேண்டும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற டிலான் பெரேரா கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

” போரில் உயிரிழந்த படையினரை நினைவுகூரும் நாள் இன்று (19).  படையினரை நினைவு கூர்ந்து அவர்களை கௌரவப்படுத்தும் அதேவேளை,  தவறான வழியிலேனும் பயணித்து புலிகள் அமைப்பில் இணைந்த தமிழ் இளைஞர்களையும் நாம் நினைவுகூர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இப்பிரச்சினை தீரப்போவதில்லை. ” – எனவும் டிலான் பெரேரா சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, இலங்கையில் மே – 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துக்கு மஹிந்த ராஜபக்சவும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

” புதிய பிரதமரின்கீழ் சர்வக்கட்சி இடைக்கால அரசு அமைய வேண்டும் என ஏப்ரல் மாதம் முதல் வலியுறுத்தி வந்தேன். சபாநாயகரை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தேன். பிரதமர் பதவி விலகாவிட்டால் மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினேன்.

ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அப்பாவி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இப்படியெல்லாம் நடந்துதான் பிரதமர் பதவி விலகினால், சிலவேளை காலை 9 மணிக்கு பிரதமர் பதவி விலகியிருந்தால்கூட வன்முறை வெடித்திருக்காது.

பிரதமராக ரணில் தெரிவாகியுள்ளார். அவரை கடுமையான விமர்சித்தவன் நான். ஆனால் சர்வதேச ஒத்துழைப்பை பெறக்கூடிய நபர் அவர். எனவே, அவருக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: அஞ்சலிஆளும் கட்சிஇளைஞர்கள்டிலான் பெரேராநாடாளுமன்றம்புலிகள் அமைப்பு
Previous Post

கோதுமை மா, பாண் விலைகள் அதிகரிப்பு!!

Next Post

இரசாயன உர மூடை 10,000 ரூபா!- சிரமத்துக்குள்ளாகும் விவசாயிகள்!!

Next Post
இரசாயன உர மூடை 10,000 ரூபா!- சிரமத்துக்குள்ளாகும் விவசாயிகள்!!

இரசாயன உர மூடை 10,000 ரூபா!- சிரமத்துக்குள்ளாகும் விவசாயிகள்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.