Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பிரதமர் பதவியில் நீடிப்பேன்! – மஹிந்த உடும்புப்பிடி!!

April 24, 2022
in இலங்கை
போதைப்பொருள் வர்த்தகத்தை நிச்சயம் ஒழிப்போம்!! – பிரதமர் மஹிந்த உறுதி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அரசியல் வரலாறு தெரியாத ஒருசிலர், என்னை பதவி விலகுமாறு வலியுறுத்தலாம். இது தொடர்பில் என்னிடம் எவரும் கோரிக்கை விடுக்கவில்லை. இடைக்கால அரசு அமைந்தால்கூட அதுவும் எனது தலைமையிலேயே மலரும்.

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்காக, பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் கூட்டறிக்கையையும் விடுத்திருந்தனர்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் கூட்டு கோரிக்கையும் இதுவாகவே இருக்கின்றது.

ஆளுங்கட்சியின் மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு நேற்று எழுதிய கடிதத்திலும், ‘பிரதமர் பதவி விலகவேண்டும்’ என்ற விடயத்தை தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ” பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனரே, ” – என பிரதமரிடம், நெத் வானொலியின் ஊடகர் கேள்வி எழுப்பினார்

அதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச,

” பெரும்பான்மையானவர்கள் அவ்வாறு கோரவில்லை. அரசியல் மற்றும் கட்சி வரலாறு தெரியாத ஒரு சிலர் அவ்வாறு கூறி வரலாம். என்னிடம் இது பற்றி எவரும் தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவிக்கவும் மாட்டார்கள் என்றே நம்புகின்றேன்.

” நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்க பிரதமர் உள்ளடங்கலான அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாரே” என எழுப்பட்ட கேள்விக்கு,

” என்ன இடைக்கால அரசு? இணக்கப்பாடின்றி அதனை எப்படி செய்வது? இடைக்கால அரசை உருவாக்குவதாக இருந்தாலும் அதனை எனது தலைமையிலேயே மேற்கொள்ள வேண்டும். புதிய பிரதமர் தலைமையில் அமையும் நடவடிக்கையை எவரும் ஆதரிக்க மாட்டார்கள் என்றே நம்புகின்றேன். ” – என்று பதிலளித்தார் பிரதமர் மஹிந்த.

அதேவேளை, ” காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஆளுங்கட்சியுடன் பேச்சு நடத்த முன்வரவேண்டும். அப்போதுதான் தீர்வை தேடலாம். பேச்சுக்கு வராவிட்டால் போராட்டத்தை தொடரவேண்டிதான் வரும்.

போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த அலரிமாளிகை கதவு திறந்தே உள்ளது. தேவையான தரப்புகளுடன் பேச்சு நடத்த ஏற்பாடு செய்து கொடுக்க நான் தயார்.”- எனவும் மஹிந்த இடித்துரைத்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது. பேச்சு நடத்துவதற்கு பிரதமர் ஏற்கனவே விடுத்த அழைப்பை போராட்டக்காரர்கள் நிராகரித்துவிட்டனர்.

அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசமைக்க எதிரணிகளும் தயாரில்லை. எனவே, தற்போதைய சூழ்நிலையில் அரசியல் நெருக்கடி நீடிப்பதற்கான சாத்தியமே தென்படுகின்றது. புதிய பிரதமரை ஜனாதிபதி நியமிக்காவிட்டால், தற்போது பதவியில் இருக்கும் பிரதமர் பதவி விலகாவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம் அவரை அகற்றலாம். அதற்கு நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.

Tags: இடைக்கால அரசுசர்வக்கட்சிடலஸ் அழகப்பெருமபிரதமர் பதவிமஹிந்த ராஜபக்ஷ
Previous Post

இலங்கை பிரதமராகும் திட்டத்தில் தினேஷ் குணவர்தன!!

Next Post

யாழ். நகரில் பொலிஸார் என்று கூறி எரிவாயு சிலிண்டர் வழிப்பறி!! – ஒருவர் கைது!

Next Post
யாழ். நகரில் பொலிஸார் என்று கூறி எரிவாயு சிலிண்டர் வழிப்பறி!! – ஒருவர் கைது!

யாழ். நகரில் பொலிஸார் என்று கூறி எரிவாயு சிலிண்டர் வழிப்பறி!! - ஒருவர் கைது!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.