Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!!

April 5, 2022
in இலங்கை
வற் வரி திருத்தச் சட்டம் நேற்று நிறைவேற்றம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை அரசியல் கொதிநிலையில் உச்சத்தை அடைந்துள்ளது. மக்கள் போராட்டங்களும் தீவிரம் பெற்றுள்ள நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது. சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசு இன்று கவிழ்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாதத்துக்கான நாடாளுமன்றக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. அரசை வீட்டுக்குச் செல்லுமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆளும் கட்சியினரின் வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. இதனால் ஆளும் கட்சியிலிருந்து பல தரப்பினரும் வெளியேறத் தயாராகியுள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள அதேவேளை, ஆளும் கட்சியிலுள்ள பல தரப்புக்களும் இன்றைய தினம் எதிரணியில் அமர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சாதாரண 113 என்ற பெரும்பான்மையை சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசு இழந்து கவிழும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாடு முழுவதும் சூடு பிடித்துள்ள போராட்டங்களின் ஒரு பகுதியாக, நாடாளுமன்றமும் இன்று முற்றுகையிடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால், சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புத் தொடர்பான விசேட கூட்டம் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: அரசியல்ஆளும் கட்சிஇலங்கைசிறிலங்கா பொதுஜன பெரமுனநாடாளுமன்றம்பொருளாதார நெருக்கடி
Previous Post

போராட்டக்காரர்களுடன் இணைந்த பொலிஸ் அதிகாரி!!- கரகோசம் எழுப்பி வரவேற்பு!!

Next Post

முஷாரப் எம்.பிக்கு பணம் கொடுத்து உரையாற்றுமாறு கூறிய சாணக்கியன்!! – நாடாளுமன்றத்தில் அமளிதுமளி!!

Next Post
முஷாரப் எம்.பிக்கு பணம் கொடுத்து உரையாற்றுமாறு கூறிய சாணக்கியன்!! – நாடாளுமன்றத்தில் அமளிதுமளி!!

முஷாரப் எம்.பிக்கு பணம் கொடுத்து உரையாற்றுமாறு கூறிய சாணக்கியன்!! - நாடாளுமன்றத்தில் அமளிதுமளி!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.