Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நாளை பதவி விலகுகின்றார் மஹிந்த? – பலமுனை நெருக்கடிகளால் எடுக்கப்பட்ட முடிவு!

May 1, 2022
in இலங்கை
நாளை பதவி விலகுகின்றார் மஹிந்த? – பலமுனை நெருக்கடிகளால் எடுக்கப்பட்ட முடிவு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை தனது பதவியில் இருந்து விலகக் கூடும் என்று கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பச்சைக்கொடி காட்டியிருப்பதாலும், மாநாயக்க தேரர்களின் அழுத்தம் காரணமாகவும் மஹிந்த ராஜபக்ச இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேநேரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவு அவசர சந்திப்பொன்று நடந்துள்ளது.

அந்தச் சந்திப்பில் பஸில் ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பிலும் இடைக்கால அரசாங்கம், பிரதமர் பதவி தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய விலகியுள்ளமையும் அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது. எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது புதிய பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற வேண்டும். அதில் அரசாங்கத்துக்குத் தோல்வி ஏற்பட்டால் பெரும் பின்னடைவாக அமையும்.

இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, மஹிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார் என்று அறிய முடிகின்றது. ஆயினும் இந்த விடயத்தில் ஜனாதிபதியின் மீதும் அவர் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் மஹிந்த ராஜபக்ச கடும் அதிருப்தியில் உள்ளார் என்றும் அறிய முடிகின்றது.

Tags: அரசியல் வட்டாரம்இலங்கைகொழும்பு உயர்மட்டம்கோத்தாபய ராஜபக்சமஹிந்த ராஜபக்ச
Previous Post

நாட்டின் கடன் தொகையை அதிகரித்த கோத்தாபய! – வெளியானது அறிக்கை!

Next Post

வடமராட்சியில் 10 வயதுச் சிறுவன் துஷ்பிரயோகம் – 32 வயது இளைஞன் கைது!!

Next Post
கர்ப்பிணி மனைவி ஆசைப்பட்டதால் பலாப்பழம் பறித்த இளைஞர் குத்திக் கொலை!!

வடமராட்சியில் 10 வயதுச் சிறுவன் துஷ்பிரயோகம் - 32 வயது இளைஞன் கைது!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.