Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நாட்டை சீர்குலைத்தனர் என மஹிந்த, பஸில் மீது வழக்கு!

June 5, 2022
in இலங்கை
நாட்டை விட்டுத் தப்பியோடும் ராஜபக்சக்கள்? – இந்திய ஊடகம் வெளியிட்ட பரபரப்புத் தகவல்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தனர் என்று குற்றம் சுமத்தி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

திறந்த பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் உள்ளிட்ட பேராசிரியர்கள் மூவர் அடங்கிய குழுவொன்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவி அமைப்புக்களும், கட்சியின் சட்டத்தரணிகளும் இணைந்து இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர உள்ளிட்ட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பணவீக்க அதிகரிப்பு, அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு, அந்நிய செலாணி பற்றாக்குறை என பல்வேறு விடயங்களின் அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மனுவில் குறிப்பிட்ட சிலர் வேண்டுமென்றே மத்திய வங்கிக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இலங்கைசீர்குலைத்தல்பஸில்பொருளாதாரம்மஹிந்தவழக்கு
Previous Post

21ஐ நடைமுறைப்படுத்த மக்கள் ஆதரவே தேவை!!- நீதியமைச்சர் தெரிவிப்பு!

Next Post

வேலையைக் காட்டிய கோத்தாபய! – கடும் கோபத்தில் ரணில் விக்கிரமசிங்க!

Next Post
“கோத்தா கோ கமவில்” கைவைக்க மாட்டோம்! – ரணில் உறுதி

வேலையைக் காட்டிய கோத்தாபய! - கடும் கோபத்தில் ரணில் விக்கிரமசிங்க!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.