Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஏனையவை

நாட்டிலுள்ள பிரச்சினைகளை உடனே தீர்க்க முடியாது!! – மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!!

March 19, 2022
in ஏனையவை
நாட்டிலுள்ள பிரச்சினைகளை உடனே தீர்க்க முடியாது!! –  மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டு மக்களின் பிரச்சினை தொடர்பாகச் சிறந்த புரிதல் உள்ளது. அந்தப் பிரச்சினைகளை ஒவ்வொன்றாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி கொலோன்ன பிரதேசத்தில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடு மிகவும் கஷ்டமான நிலைமையில் இருக்கும் நேரம் என்பது உங்களுக்கு தெரியும். ஒருபுறம் கொரோனா தொற்று நோயை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

கொரோனாவை நாங்கள் மிக வெற்றிகரமாக எதிர்கொண்டோம். அதேபோல் வேறு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள காலத்தில் நாம் இருக்கின்றோம். அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்களை வழங்குவது அரசாங்கத்தின் கடமை.

அதைச் செய்ய அரசாங்கம் தயாராக இருக்கின்றது. கிராமங்கள், பிரதேசங்கள் முன்னேற்றமடைய வேண்டுமாயின் வீதிகள், மின்சாரம், குடிநீர் வசதிகளை வழங்க வேண்டும். படிப்படியாக ஒவ்வொன்றாக எடுத்து வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. நாங்கள் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகப் புரிதல் உள்ளவர்கள்.

நாட்டு மக்களின் தேவைகளை அறிந்த தரப்பினரே தற்போது ஆட்சியில் உள்ளனர். ஒரே தடவையில், ஒரு நாளில், ஒரு மணி நேரத்தில் அல்லது ஒரு வருடத்தில் அனைத்தையும் செய்ய முடியாது. ஒவ்வொன்றாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதற்காக மக்களின் ஒத்துழைப்பு எமக்கு தேவை என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: இலங்கைபொருளாதார நெருக்கடிமஹிந்த
Previous Post

இன்றைய ராசிபலன்- 19.03.2022

Next Post

மீண்டும் சீனாவிடம் கடன் கேட்கின்றது இலங்கை!!

Next Post
மீண்டும் சீனாவிடம் கடன் கேட்கின்றது இலங்கை!!

மீண்டும் சீனாவிடம் கடன் கேட்கின்றது இலங்கை!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.